பிரயாக்ராஜ் வன்முறை - 59 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுப்பிடிக்கும் நோக்கில், வன்முறை நடந்த ஆறாம் நாளில் கல்வீச்சிலும், வன்முறை போராட்டத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 59 நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தியது.
    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
    • ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபி தொடர்பாக தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட இளைஞரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
    • குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.
    • குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    • காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  2. தருமபுரி பஸ் எரிப்பில் தொடர்புடையோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன: அதிமுக முன்னாள் அமைச்சர்

    கருப்பணன்

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுகவினருக்கு எம்எல்ஏ உள்ளிட்ட பெரிய பதவிகள் அதை நடத்தியதற்காகவே வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருக்கிறார்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அப்பகுதி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் கூட்டத்தில் பேசும்போது, கட்சிக்காக சிறைக்கு சென்றபோது, கோவை சிறையில் தாங்களே சமைத்து சாப்பிட்டு ஜாலியாக இருந்ததாகவும், தண்டனை கொடுக்க மாட்டார்கள், காலை போனால் மாலை வந்து விடலாம், இதுதான் அரசியலில் வரும் வழக்குகள் எனவும் தெரிவித்தார்.

    தருமபுரி பஸ் எரிப்பு சம்பவ வழக்கில் தொடர்புடைய ஒன்றிய செயலாளருக்கு 4 வருடம் சிறை தண்டனை வழங்கிய போதும், 4 வருட தண்டனையை ரத்து செய்து, அந்த ஒன்றியச் செயலாளரை எடப்பாடியார் எம்எல்ஏவாக ஆக்கியதாகவும், அதற்காகவே எம்எல்ஏவாக ஆக்கியதாகவும், இதில் தொடர்புடைய மேலும் இருவருக்கு கட்சியில் பெரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  3. பிரயாக்ராஜ் வன்முறை - சந்தேகிக்கப்படும் 59 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை, அனந்த் ஜனானே

    பிரயாக்ராஜ் வன்முறை

    பட மூலாதாரம், Getty Images

    கான்பூரில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுப்பிடிக்கும் நோக்கில், வன்முறை நடந்த ஆறாம் நாளில் கல்வீச்சிலும், வன்முறை போராட்டத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 59 நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

    இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 92 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

    முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தையொட்டி, இங்கு வன்முறை வெடித்தது.

  4. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளால் முடியுமா?

  5. எளிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலை செய்து மூடி மறைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? - சீமான் கேள்வி

    'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தூங்கவில்லையென மனமுருகும் முதல்வர், அவரது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களைக் கண்டும் காணாதது போல இருப்பது வெட்கக்கேடு இல்லையா? எளிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலை செய்து மூடி மறைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? - சீமான்

    சீமான்
  6. இலங்கையில் 'சிவ வழிபாடு நடந்த இடத்தில்' பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி - பின்னணி என்ன?

  7. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை - துரைமுருகன்

    துரைமுருகன்

    காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் எம் பி ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்குப் பின்னர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தடையாக இருப்பது தமிழகம் அல்ல.. கர்நாடக அரசு தான். முதலில் ஒப்பந்தம் முடிந்து விட்டது என தடை போட்டது கர்நாடக அரசு. பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்ட போது அதை தடுத்து வந்ததும் கர்நாடக அரசு.

    தீர்ப்பாயம் வந்த பிறகு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் கர்நாடக அரசு.

    தீர்ப்பாயம் வந்த பிறகு அரசாணையில் போட்ட பிறகும் 3,4 ஆண்டு காவிரி நீர் மேலாண்மை குழுவுக்கு தலைவரை நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசு.

    காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது கர்நாடக அரசு.அவர் தமிழகத்தை குற்றம் சொல்வது பெருமை அல்ல. முதல்வரின் கருத்து சரியல்ல. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை.” என்றார்.

  8. குறைவாக தேநீர் பருகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் அறிவுரை

    குறைவாக தேநீர் பருகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் அறிவுரை - உங்கள் கருத்து என்ன?

    பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் பகிருங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. டெல்லி காவல்துறை தனது ஆடைகளை கிழித்து அவமதித்ததாக ஜோதிமணி எம்.பி. புகார்

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணியை காவல்துறை கைது செய்தனர்.

    இது தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்ட ஜோதிமணி, "சட்டத்திற்கு விரோதமாக எனது உடைகளை கிழித்து, ராணுவத்தின் உதவியோடு என்னை கைது செய்து டெல்லி காவல்துறை ஒரு மணி நேரமாக எங்கோ அழைத்து சென்றுகொண்டுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

    "ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் தொடர்ந்து தர மறுக்கின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாரளித்துள்ளேன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நரேந்திர மோதியின் ஆட்சியில் இது தான் நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு, எதிர்க்கட்சியை சேந்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு தென் சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. பிரதமர் நரேந்திர மோதியின் மௌனம் தற்செயலானது அல்ல: ஹமித் அன்சாரி பிபிசிக்கு பேட்டி

  11. குடியரசுத் தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்பு

    மமதா பானர்ஜி

    பட மூலாதாரம், ANI

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து 22 கட்சியின் தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

    அவரது அழைப்பை ஏற்று, காங்கிரஸ், திமுக, சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 17 எதிர்க்கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் பொது வேட்பாளராக போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மமதா பானர்ஜி, பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுத்துவிட்டார் என்றும், பொது வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  12. விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன?

  13. குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், Madurai PRO

    குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    மேலும் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேசுகையில்,நகை கடன் தள்ளுபடி, நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கியது, தகுதியான நபர்களை தேர்வு செய்வதில் சில தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும், குடும்பத் தலைவிகளின் விவரங்களை சேகரித்து ஆய்வு செய்த பின்னர் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

  14. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பற்றி நடிகை சாய் பல்லவி கருந்து

    சாய் பல்லவி
  15. மாட்டு எலும்பு என்ற பெயரில் யானைத் தந்தங்கள் ஆன்லைனில் விற்பனை: பிபிசி புலனாய்வு

    Elephants

    பிபிசி நியூஸ், இபேயில் மாட்டின் எலும்பு என்று பட்டியலிடப்பட்ட மூன்று பொருட்களை 2019-ஆம் ஆண்டில் ஒரு சுயாதீன ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக வாங்கியது. நாங்கள் வாங்கிய மூன்று பொருட்களில் ஒரு சிறிய, செதுக்கப்பட்ட ஆப்பிரிக்க தலை ஆபரணம், ஒரு வளையல், இரண்டு சிறு சிலைகள், என்று மூன்று பொருட்கள் வாங்கப்பட்டன. அவற்றில் இரண்டு யானை தந்தத்தால் ஆனது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தொல்லியல் கல்லூரியின் விஞ்ஞானிகளால் வேதியியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்.

  16. குடியரசுத் தலைவர் தேர்தல் - மமதா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

    குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து 22 கட்சியின் தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வெளிநாடு செல்ல முயற்சித்த மேலும் 64 பேர் இலங்கையில் கைது

    SRI LANKA NAVY

    பட மூலாதாரம், SRI LANKA NAVY

    இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில், சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சுற்றி வளைப்பு இன்று (ஜூன் 15) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணித்துக்கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, குறித்த படகு கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த படகில் பயணித்த 50 ஆண்களும், 11 பெண்களும், 3 குழந்தைகளை கடற்படையினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

    மேலும், ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 2 வயது முதல் 55 வரையான வயதுக்கு இடைப்பட்டவர்கள் உள்ளதாக கடற்படை குறிப்பிடுகின்றது.

    இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.

  18. சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் - மீட்க 100 மணி நேர போராட்டம்

  19. அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார்?: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனி ஆலோசனை

  20. முஸ்லிம்களின் வீடு இடிப்பு - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

    இம்ரான் கான்