எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது - பீட்டர் அல்போன்ஸ்
எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பீட்ட அல்போன்ஸ் பேசுகையில், "சமீப காலமாக அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை உற்று கவனித்தால் அது எதற்காக படன்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்கள், அக்கட்சியின் கூட்டணி தலைவர்களுக்கு எதிராக இந்த முகமை விசாரணை நடத்தியதில்லை.
உடல் நலமில்லாமல் இருக்கும் சோனியாவை வேண்டுமென்றே சிரமப்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தியை முடக்கும் வகையிலும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. இதனை காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக எதிர்க்கிறது. ஏனெனில், இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு. அதற்காகத்தான் காங்கிரஸ் இதற்காக போராடுகிறது" என தெரிவித்தார்.