இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.
- கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் பாணந்துறை, பேருவளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் 2 பேர் உயிரிழந்தனர். இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
- ரஷ்யா யுக்ரேனின் 20 சதவீதத்தை கைபற்றியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர், ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்.
- சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சீர்திருத்தங்களால் இந்தியா வலிமையுள்ள நாடாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஞானவாபி விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தைத் தேடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி







