நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.
- ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
- விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை.
- பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி விலகியுள்ளார்.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில், ராமநாதபுரம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர் என்றார்.