வந்துகொண்டிருக்கும் செய்தி, விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயா நாயர் வழக்கில், அவரது கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்கள்கிழமையன்று, விஸ்மயா நாயரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்தது.கேரளாவில் விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு மாணவிக்கு கிரண் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது கணவரைக் குற்றவாளி என அறிவித்த கொல்லம் கூடுதல் நீதிமன்றம், இன்று அவருக்கான தண்டனையை அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு




