இலங்கை வன்முறை: முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
    • இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.
    • திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
    • சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
    • பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  2. உதயநிதி ஸ்டாலின்: "மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பேனா என தெரியவில்லை"

  3. ஜெய்பீம் பட சர்ச்சை இயக்குனர் ஞான வேல் மற்றும் சூர்யா மீது வழக்கு பதிவு

    வேளச்சேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், தான் ஸ்ரீ ருத்ர வன்னியர் சேனா என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வருவதாகவும் OTT தளத்தில் வெளியிடப்பட்ட ஜெய்பீம் என்ற படத்தில் வன்னிய இன மக்களை இழிவு படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 08/11/2021 தேதி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

    இதில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல்,நடிகர் சூர்யா ஆகியோர் மீது தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பி பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடி தான் கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளார். மேற்படி நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் மேற்படி இவ்வழக்கிற்காக படத்தில் முக்கிய பங்கு வகித்த இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சூர்யா மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் இருவர் மீதும் 295(A) IPC பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    surya

    பட மூலாதாரம், Amazon prime video

  4. இலங்கை வன்முறை: ஜனாதிபதி கோட்டாபய கட்சி எம்.பிக்கள் இருவர் கைது

  5. புதுக்கோட்டை அரசு சேமிப்பு கிடங்கில் 5, 000 மூட்டைகள் நெல் சேதம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சேமிப்பு கிடங்கில் 5, 000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன. இதையடுத்து ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கு எரிச்சி மற்றும் துளையானூரில் உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்கு வைத்து, பராமரிக்கப்படும்.

    இந்நிலையில்,துளையானூரில் உள்ள 5, 000 நெல் மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதையடுத்து, நெல் மூட்டைகளை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்று அங்கு பணியாற்றிய சரவணன், ரவி ஆகிய இருவரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதன்மை மேலாளர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் இளவரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சேமிப்பு கிடங்கில் 5000 நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து சேதமடைந்துள்ளதற்கு மண்டல முதன்மை மேலாளர் உமாமகேஸ்வரி தான் பொறுப்பு.

    ஆனால், அவர் தப்பிப்பதற்காக இங்கு பணியாற்றிவரும் நால்வரில் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதற்கு ஐஎன்டியூசி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றார்.

    சேமிபு கிடங்கில் நெல் மூட்டைகள்
  6. இலங்கை காலிமுகத் திடல் வன்முறை தொடர்பில் எம்.பிக்கள் இருவர் கைது

    இலங்கையின் காலி முகத்திடல் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கை கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஜனாதிபதி் கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காலி முகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது,

    இதன்படி, கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

    இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

    முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், போலீஸ் மாஅதிபருக்கு அறிவித்திருந்தார்.

    கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கை குற்றவியல் விசாரணை திணைக்களம்
  7. நெல்லை கல்குவாரி விபத்து: இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு

    திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்ககோட்டை அருகே தருவை கிராமம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி, ராட்சத பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

    இதில், முருகன், விஜய் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் முருகன்(23), செல்வன் (25) இருவரும் உயிரிழந்தனர். இருவரின் குடும்பத்தாருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், தொழிலாளர் நலவாரியம் மூலம் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அரசு இழப்பீடு அறிவிப்பு

    பட மூலாதாரம், TN DIPR

  8. ஓ.டி.டி-யில் Binge watching: இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன?

  9. சென்னையில் ரூ. 25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு

    மரகத லிங்கம்

    பட மூலாதாரம், TN Police Dept

    வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 500 ஆண்டு பழமையானதாகக் கூறப்படும் மரகத லிங்கத்துடன் கூடிய சிலையை காவல் துறையை மீட்டனர்.

    சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சை கல் லிங்கம் ஒன்றை, பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், போலீசார் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் கடத்தல்காரர்களை தொடர்பு கொண்டனர்.

    சென்னை வெள்ளவேடு புது காலனியைச் சேர்ந்த பக்தவத்சலம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோர் இச்சிலையின் மதிப்பு 25 கோடி ரூபாய் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, தனிப்படை போலீசார் இச்சிலையை கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு, இருவரையும் கைது செய்தனர்.

    மேற்படி, பச்சை லிங்கத்தை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வாருடன் சுமார் 29 செ.மீ உயரம், 18 செ.மீ அகலம், பீடத்தின் அடியாக சுற்றளவு சுமார் 25 செ.மீ உள்ளது. சுமார் 9.800 கிராம் எடையுடன் லிங்கம் உள்ளது.

    மேலும், இச்சிலையானது 500 ஆண்டுகால தொன்மையானது என்றும் கூறப்படுகிறது.

  10. தமிழ்நாடு: ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறா? - அரசின் ஆய்வு எழுப்பும் சந்தேகங்கள்

  11. உ.பி ஞானவாபி மசூதி வழக்கு: உச்சநீதிமன்றம் சொன்னது என்ன ?

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதேசமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் 19ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

    ஞானவாபி மசூதி
  12. சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் - கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

    சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    இதன்படி, சீன நாட்டினர் 263 பேருக்கு விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்திக் சிதம்பரம், சென்னையைச் சேர்ந்த பாஸ்கர ராமன், பஞ்சாபை சேர்ந்த விகாஸ் மகாரியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, மும்பை, பஞ்சாப், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. உத்தர பிரதேசம் வாரணாசி ஞானவாபியில் என்ன நடக்கிறது ? விளக்கும் காணொளி

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியில் நடைபெற்ற ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்றதாக, இந்து தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று என, முஸ்லிம் தரப்பினர் மறுக்கின்றனர்.

    என்ன தான் நடக்கிறது.? விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. இந்தியா பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு

    மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத உலக அரசியல் சூழலில், இந்தியா பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

    நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று உரையாடினார். அவரது உரையில், ‘புதிதாக வளர்ந்து வரும் தகவல் மற்றும் சைபர் யுத்த வழிமுறைகளுக்கு ஏற்றவாறு நம்முடைய திறன்களையும் வளர்க்க வேண்டும். மாறி வரும் மோதல் தன்மைகள் மற்றும் அதிகரித்து வரும் ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு போர்முறைகளில் முன்னுதாரணமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

    பாதுகாப்பு மற்றும் வான்வழி தொழில்நுட்பங்களில் தற்சார்பை அடைய வேண்டும். மக்களுக்கு நம்முடைய துணிவான வீரர்களின் தியாகங்களை தெரியப்படுத்த வேண்டும். பாதுகாப்பு துறை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு துறைகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

    மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத உலக அரசியல் சூழலில், இந்தியா பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகிற, நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை களைவதற்கு பாதுகாப்பு படைகள் தயாராக இருக்க வேண்டும்.

    இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் எந்த சக்தியையும் நம்முடைய பாதுகாப்பு படைகள் வலுவுடன் கையாள்வார்கள். ராணுவ வீரர்களின் தியாகங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாகவும் கல்வி நிலையங்களின் நினைவு சின்னங்களை உருவாக்க வேண்டும்’ என்றார்.

    குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு
  15. தமிழ் தேசிய கூட்டணி எம்.பி-யின் பிரேரணை தோல்வி

    கோட்டாபய ராஜபக்ஷ
    படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

    அரசியலமைப்பல் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமல் போனதன் மீதான நாடாளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

    இவ்வாறு முன்வைக்கப்பட்ட பிரேரணையை எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

    குறித்த பிரேரணைக்கு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, சபையில் அமளி ஏற்பட்டது.

    ஜனாதிபதியின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுக்க முடியாது என தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 11ஆம் தேதி நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டது.

    நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி, ஐந்து நாட்களின் பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

    சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவின் கடும் எதிர்ப்பை அடுத்து, எம். ஏ.சுமந்திரனின் பிரேரணையை நிறைவேற்ற வாக்கடுப்பொன்றை நடத்துமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

  16. பாஜகவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி

    பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,

    ''பொது பிரச்னைகள் - வருவாய், பணவீக்கம்.

    பா.ஜ.க பிரச்னைகள் - கலவரங்கள், சர்வாதிகாரம்

    நாடு முன்னேற வேண்டுமென்றால், பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும். நாம் ஒன்றுபட்டு 'இந்தியாவை இணைப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. எல்.ஐ.சி பங்கு விற்பனை: முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

    எல்.ஐ.சி பங்கு விற்பனை

    இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC IPO பங்கு சந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கின் விலை 949 ரூபாயாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 872 ரூபாய்க்கு பட்டியலியலானது. இதனால் முதலீட்டாளார்கள் ஏமாற்றமடைந்தனர்.

  18. பாகிஸ்தான் தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

    பாகிஸ்தான் தேசிய சபையில், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி முன்வைத்த தீர்மானத்தில், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் எல்லை மறுவரையறை முடிவு, அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் அதிகாரம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இந்த விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும், பாகிஸ்தானால் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள பகுதிகளும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அது தொடரும் என்றும் அரிந்தம் பக்சி கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் எல்லை மறுவரையறை என்பது ஒரு ஜனநாயக செயல்முறை என்றும், சம்பந்தப்பட்ட அனைவரின் ஆலோசனை மற்றும் பங்கேற்பு கோட்பாட்டின் அடிப்படையிலானது என்றும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

    இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் எல்லை நிர்ணய நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் நிறைவேற்றிய கேலிக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  19. கிரிப்டோகரன்சியில் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? - விளக்குகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

  20. கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி - பீகார், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் அபாரம்

    தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி

    பட மூலாதாரம், TN Hockey Association

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி இன்று காலை தொடங்கியது.

    வரும் 29ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 540 வீரர்கள் பங்கேற்கும் 50 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில், குருப் இ பிரிவில் உள்ள பீகார் அணியும், அசாம் அணியும் மோதின. முடிவில் 11 - 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது.

    2வது போட்டியில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள அருணாச்சல பிரதேசம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இறுதியில் 5 - 0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது.

    3வது போட்டியில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் - கோவா அணிகள் மோதின. இறுதியில் 10 - 0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது.

    காலையில் நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி அணிகள் மொத்தம் 26 கோல்கள் அடிக்கப்பட்டன. தோல்வியுற்ற அணிகளில் அசாம் ஹாக்கி அணி மட்டும் ஒரே ஒரு கோல் அடித்தது.

    தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி