யுக்ரேன் கிழக்கில் ரஷ்யாவை வெளியேற்ற தயாராகி வருகிறோம் - ஸெலென்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனின் கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற தயாராகி வருவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் கியவ் நகரை ரஷ்யா கைப்பற்றத் தவறியது. இதனால், டோன்பாஸினை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாகியுள்ளது. "தெற்கு யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க தயாராகி வருகிறோம். ரஷ்யாவின் புதிய தாக்குதலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகி வருகிறோம்" என்று ஸெலென்ஸ்கி தனது உரையில் கூறினார். "ஆக்கிரமிப்பாளர்கள் இறுதி கட்டத்தில் இருப்பதை இன்னும் ஏற்கவில்லை. அவர்களின் 'சிறப்பு நடவடிக்கை' என்று என்பது ஏற்கனவே காலாவதியாகி விட்டது." என்றும் அவர் கூறியுள்ளார்.







