சென்னையில் விசாரணை கைதி மரணம் - சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சென்னையில் விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திடுக - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மட்டுமே உள்ளது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, நிலக்கரி துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்று தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவுக்கு எட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன என்றும், இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    எனவே, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

  2. இலங்கை போல் நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடியா ? - இந்தியா, சீனா உதவுமா ?

    நேபாளத்தில் பொருளாதார நெருக்கடியா?

    பட மூலாதாரம், Getty Images

    பொதுவாக ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது 7 மாத இறக்குமதிக்குப் போதுமானதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    நேபாளத்தின் அந்நிய செலாவணி கையிருப்புத் திறன் தற்போது 6,7 மாதங்களுக்குத் தான் இருப்பது கவலைக்குரிய விஷயம். அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் சிலர் நேபாளத்தை இலங்கையுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  3. புத்தகத்திற்கு முன்னுரை எழுத இளையராஜாவை ஏன் பிடித்தார்கள்? - திருமாவளவன்

    தொல். திருமாவளவன்

    பட மூலாதாரம், Thirumavalavan Twitter

    புத்தகத்திற்கு முன்னுரை எழுத இளையராஜாவை ஏன் பிடித்தார்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், "அம்பேத்கரையும் மோதியையும் ஒப்பிட முடியுமா? மோதி சமத்துவத்திற்கான தலைவரா? சகோதரத்துவத்திற்கான தலைவரா? சாதி ஒழிப்புக்கான தலைவரா? பெண்கள் படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற தலைவரா? எப்படி அம்பேத்கரை மோதியுடன்‌ ஒப்பிட முடியும்? இருவரும் இரு‌ துருவம்.

    ஆனால், இளையராஜாவிற்கு என்ன நெருக்கடியோ? அவர் அம்பேத்கரைப் படித்திருக்கக்கூடும். ஆனால், ஒருநாள் கூட இளையராஜா அம்பேத்கரின் பெயரை உச்சரித்ததில்லை. பிறந்தநாளிலோ, நினைவு நாளிலோ அவருடைய படத்திற்கு மலர் தூவி நான் பார்த்ததில்லை.

    திடீரென்று அவர்‌ மோதி செயலை அம்பேத்கர் உயிருடன் இருந்தால் பாராட்டுவார் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. முன்னுரை எழுத எவ்வளவோ அறிவாற்றல் மிகுந்த அரசியல் பிரபலங்கள் இருக்கும் போது ஏன் இளையராஜாவைப் பிடித்தார்கள்?

    ஆதிதிராவிடர் சமூகத்திற்கு மாற்றாக யாரை வேண்டுமானாலும் கொண்டுவந்து நிறுத்துவார்கள். எப்படி வேண்டுமானாலும் சதித்திட்டங்களைக் கூர்தீட்டுவார்கள். அதில் முதல் படி தான் இளையராஜாவை முன்னுரை எழுத வைத்தது.

    இளையராஜாவை மற்றவர்கள் இசைஞானியாக புரிந்துகொண்டிருந்தாலும், இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களின் சொந்தமாக புரிந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் எங்களில் ஒருவர் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் அங்கே பாஜக கை வைக்கிறது" என தெரிவித்தார்.

  4. திருமாவளவன்: "இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?"

  5. ஒரே இரவில் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

    இலங்கை தமிழர்கள்

    ஒரே இரவில் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதன் காரணமாக, இதுவரை 42 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், நேற்று ஒரே இரவில் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்களை மெரைன் போலீசார் மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் இலங்கை தமிழர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

  6. பாடல் வரிகளில் மாற்றம் செய்து பாடிய இசையமைப்பாளர் இளையராஜா

    "நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே, இந்த நாள் நன்னாள் என்று பாடு, என்னதான் இன்னும் உண்டு கூறு” - தளபதி படத்தின் பாடல் வரிகளில் மாற்றம் செய்து, பாடிய இசையமைப்பாளர் இளையராஜா

    இளையராஜா
  7. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் - போரிஸ் ஜான்சன்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் இருநாட்டு பிரதமர்களும் இன்று சந்தித்துள்ளனர். இதன்பின்னர், இந்திய பிரதமர் மோதி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும், விதிகளின் அடிப்படையிலும் வைத்திருப்பது குறித்து நாங்கள் பேசினோம்.

    வான்வழி, விண்வெளி மற்றும் கடல்வழி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட ஒப்புக்கொண்டுள்ளோம்.

    நீடித்த நிலைத்த எரிசக்தியை அடைவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இருநாட்டு உறவுகளை ஆழமாக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

    சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கத் தயார்.

    பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்கப்படும்.

    எல்லா வகையிலும் இந்தியா - பிரிட்டன் உறவை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம்.

    நான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன், அது நன்றாக இருக்கிறது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி" என தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பு: "பாதுகாப்பு, வணிகம் குறித்து பேசினோம்" - பிரதமர் மோதி

    பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட துறைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பேசியதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்றைய தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அவரை அந்த மாநில ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    காந்தி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் இருநாட்டு பிரதமர்களும் இன்று சந்தித்துள்ளனர்.

    இந்த சந்திப்புக்குப் பின்னர், மோதி மற்றும் போரிஸ் ஜான்சன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய பிரதமர் மோதி, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (இந்தியாவின் 75 -ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இந்த பெயரில் கொண்டாடப்படுகிறது) கொண்டாடப்படும் வேளையில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

    பருவநிலை மாற்ற உச்சி மாநாடான COP26 மாநாட்டில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தினோம்.

    தேசிய ஹைட்ரஜன் மிஷனில் இணைய பிரிட்டனுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். கடந்த ஆண்டு நாங்கள் (இந்தியா-பிரிட்டன்) ஒரு விரிவான தந்திரோபாய கூட்டாண்மையை தொடங்கினோம்.

    பாதுகாப்பு, வணிகம், காலநிலை மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகள் குறித்து நாங்கள் பேசியுள்ளோம்" என தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் மீண்டும் அபராதம் - ராதாகிருஷ்ணன்

    ராதாகிருஷ்ணன்

    பட மூலாதாரம், FACEBOOK

    தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து தமிழகம் வருபவர்களை தடுப்பதை மக்கள் விரும்புவதில்லை, ஏனெனில் மக்களுக்கு இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும்.

    நோய்த்தொற்று அறிகுறி தென்படும் இடங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். வடமாநில தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறோம்.

    பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் உள்ள தொய்வை மக்கள் களைய வேண்டும்.

    சென்னை ஐஐடியில் கடந்த இரு வாரங்களாக நிறைய பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கின்றனர். ஆனால், அவர்களால் தொற்று அதிகரிப்பதாக அவர்களின் மேல் களங்கம் கற்பிக்கக்கூடாது. ஐஐடியில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு வசதி ஏற்படுத்தி, பரிசோதனை செய்து ஐஐடி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

    பொது இடங்களில் கவனக்குறைவாக முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்" என தெரிவித்தார்.

    இதனிடையே சென்னை ஐஐடியில் ஏற்கெனவே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.

  10. தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

    தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்து, சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

  11. அட, நம்மூரில் ஸ்பைடர் மேனா? ஆச்சர்யம் அடைந்த நைஜீரியர்கள்

    நைஜீரிய நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேனாக ஆடையணிந்து, தெருக்களை சுத்தம் செய்ய உதவுகிறார். அவர் குறித்த காணொலி:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. தொடர் மின்வெட்டு புகார்: தமிழக அரசின் நிர்வாகக் கோளாறே காரணம் - எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், FACEBOOK

    தமிழக அரசின் நிர்வாகக் கோளாறால் மாநிலத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, அதிமுக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாடு அரசின் தவறான முடிவுகள்தான் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம். முந்தைய அரசில் கோடை காலத்தில் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்போம். மின்வெட்டு இல்லாத தமிழகமாக விளங்கியது.

    கடந்த கால திமுக ஆட்சியிலும் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    நிலக்கரியை போதுமான அளவில் கொள்முதல் செய்து கையிருப்பில் வைக்காததால் அனல்மின் நிலையங்களால் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. தொழிலாளர்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இது தேர்வு சமயம், மாணவர்களால் படிக்க முடியவில்லை. பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து மின்சாரம் வழங்கியிருக்கலாம். அதையும் அரசு செய்யவில்லை. இப்போது காற்றாலை மூலமாக 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அது இருந்தும் மின்வெட்டு ஏற்படுகிறதென்றால், இது நிர்வாகக் கோளாறால் ஏற்பட்டது" என தெரிவித்தார்.

  13. அதிமுக ஆட்சியில் இது போல 68 முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    கடந்த கால அதிமுக ஆட்சியில் இது போல 68 முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி,

    "திடீரென மத்தியத் தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரம் 798 மெகா வாட் அளவுக்கு தடை பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியை நள்ளிரவு நேரத்திலும் விழித்திருந்து சரி செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய உத்தரவுகளை வழங்கினார் என்றும், "நமது சொந்த உற்பத்தியை அதிகரித்ததன் மூலமும், தனியாரிடம் அதுவும் குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலமும் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கடந்த காலத்தில் சொந்த மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சிறிதும் முயற்சி செய்யப்படவில்லை. ஆனால், தற்போது மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலக்கரி அளவை குறைத்துக் கொடுத்தபோதும் சொந்த உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். சொந்த உற்பத்தியை அதிகரித்து ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி".

  14. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம். இதுவரை ஜோ மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  15. இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் - சிறப்பான சந்திப்பு என்று பேச்சு

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு நேற்று வந்தார்.

    இரண்டாவது நாளான இன்று காலை டெல்லிக்கு வந்த அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.

    இதை தொடர்ந்து உரையாற்றிய போரிஸ் ஜான்சன், "இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு சிறப்பான சந்திப்பு.பிரிட்டன், இந்தியா இடையேயான உறவு முன்பு இல்லாத அளவு வலுவாகவும் சிறப்பாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார் ஜான்சன்.

    இங்கு அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு ஆச்சர்யப்படுத்தியுள்ளது. குஜராத் மக்கள் மனமகிழ்ச்சியுடன் நேற்று என்னை வரவேற்றனர். இது போன்ற வரவேற்பை இதுவரை எனக்கு யாரும் அளித்தது இல்லை." என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, மதுரை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

    மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

    கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் (VRG) உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

  17. இந்தியா, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு - பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

    மோதி - போரிஸ் ஜான்சன் சந்திப்பு

    பட மூலாதாரம், Narendra Modi/Twitter

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்றைய தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அவரை அந்த மாநில ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். காந்தி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் இருநாட்டு பிரதமர்களும் இன்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இந்திய பிரதமர் மோதி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    குறிப்பாக மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அருமை நண்பர் போரிஸ் ஜான்சனின் இந்த சந்திப்பு அற்புதமாக இருக்கிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வணக்கம் நேயர்களே

    வணக்கம், இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
    • யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
    • ஆப்கானிஸ்தானில் இன்று நான்கு குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
    • கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
    • சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.