நன்றி நேயர்களே
இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
- யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
- ஆப்கானிஸ்தானில் இன்று நான்கு குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
- கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
- எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












