நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
- இந்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
- யுக்ரேன் - ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
- "கேஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக திட்டமிடுவதாக" ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
- யுக்ரேனின் துறைமுக நகரமான மிக்கோலைவ் நகரத்தில் உள்ள அரசு கட்டடத்தில் (ஆளுநர் அலுவலகம்) நடந்த ரஷ்யத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும், யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கிழக்கு யுக்ரேனில் உள்ள ரஷ்யப்படைகள் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியதாக, யுக்ரேன் செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.
- சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
- யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
- பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி விலக்கிக்கொண்டது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




















