நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
- சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்
- மீராபாய் சானுவுக்கு 2021-ஆம் ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
- பாகிஸ்தான்: இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
- யுக்ரேனில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் திங்கட்கிழமை செயல்படுத்தப்படாது என்று அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யா, யுக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவுகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
- யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
- மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
- 3500 கோடி ரூபாய் முதலீடு: லுலு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
- பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு காவல் நீட்டிப்பு















