மேரியோபோல் மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு: யுக்ரேன்

யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    மார்ச் 9ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.
    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
    • செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.
    • வடகிழக்கு நகரமான சுமியில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இன்னும் ஏராளமான மக்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலுக்கு உள்ளான சுமியிலிருந்து செவ்வாய்க்கிழமை சுமார் 7,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
    • சுமியில் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • கீயவ், செரீனிஹிவ், சுமி, கார்கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களிலும் மனிதநேய வழித்தடம் அமைக்கப்படும் என, ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
    • ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து, யுக்ரேனிலிருந்து 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
    • ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜேய் லாஃபராவ் மற்றும் யுக்ரேனின் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா இருவரும் நாளை, வியாழக்கிழமை துருக்கியில் சந்திக்க உள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவ்வின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்திவரும் நிலையில், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

    பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்

  2. பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களுக்குப் பின் உயிரிழப்பு

    பன்றி இதயம்

    பட மூலாதாரம், UNIVERSITY OF MARYLAND SCHOOL OF MEDICINE

    உலகில் முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணமடைந்தார்.

    பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட், 2 மாதங்கள் மட்டுமே அதனுடன் உயிர் வாழ்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவரது நிலைமை மோசமடைந்து வந்ததாகவும் நேற்று சிகிச்சை பலனின்றி பென்னட் உயிரிழந்ததாகவும் பால்டிமோரில் உள்ள அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின்போதே இதன் அபாயத்தை பென்னட் உணர்ந்திருந்தார். பென்னட்டிற்கு மனித இதயத்தை பொருத்துவதற்கான சாத்தியம் இருக்கவில்லை.

    இதனால் அவரது உயிரை காக்க வேறு வழியின்றி பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலான்ட் மெடிகல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியது.

    இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆறு வார காலம் கருவிகளின் உதவியுடன் பென்னட் படுக்கையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ம் தேதி பென்னட்டிற்கு பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பின் அவர் தனது குடும்பத்துடன் நேரம் கழித்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து தனது நாயை சந்திக்க வேண்டும் என்றும் எண்ணியுள்ளார். ஆனால் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.

    "பென்னட் ஒரு தையரியசாலி; இறுதி வரை தனக்கு ஏற்பட்ட பிரச்னையை எதிர்கொண்ட உன்னத நோயாளி" என புகழாரம் சூட்டியுள்ளார் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் பார்ட்லே கிரிஃப்பித்.

    "தந்தைக்கு செய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை நம்பிக்கையின் தொடக்கமாக இருந்தது. முடிவாக அல்ல. இந்த வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொரு புதுமையான தருணத்திற்கும், ஒவ்வொரு கனவுக்கும், ஒவ்வொரு தூக்கமில்லாத இரவுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என பென்னட் மகன் டேவிட் ஜூனியர் ஏ.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

  3. யுக்ரேன் மகப்பேறு மருத்துவமனை மீது குண்டுவீச்சு: ஸெலன்ஸ்கி

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.

    மேரியோபோல் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் இது கொடூரமானது எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் மேரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு வார்டில் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாக தனது ட்விட்டர் பதிவியில் யுக்ரேன் எம்.பி. திமித்ரோ குரின் கூறியுள்ளார்.

    இவ்விரு காணொளிகளிலும் பல மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றிலும் சேதமடைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  4. யுக்ரேனில் எந்தெந்த பகுதிகளில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் நடைபெற்றுவரும் சண்டையால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அங்கு 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதித்துள்ளதாக, யுக்ரேன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி அங்கிருந்து யாரேனும் பாதுகாப்பாக வெளியேற முடிகிறதா என்பதை நாம் இனிதான் பார்க்க வேண்டும்.

    இதுதொடர்பாக, யுக்ரேன் துணை பிரதமர் இரினா வெரெஸ்சுக் கூறுகையில், உள்ளூர் நேரப்படி 09:00 மணிமுதல் 21:00 மணி வரை, சண்டையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஆறு பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய அதிபர் மாளிகை சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.

    அதன்படி, மனிதநேய வழித்தடங்கள் திறக்கப்படும் ஆறு பகுதிகள்:

    • மரியுபோலில் இருந்து ஸாப்போரீஷியா
    • எனெர்ஹோடாரில் இருந்து ஸாப்போரீஷியா
    • சுமியில் இருந்து போல்டாவா
    • ஐசியம்-ல் (Izyum) இருந்து லோஸோவா
    • வோல்னோவாகாவில் இருந்து டொனெட்ஸ்க்கில் உள்ள போக்ரோவ்ஸ்க்
    • அதேபோன்று கீயவை சுற்றியுள்ள வோர்ஸெல், போரோடியான்கா, புச்சா, இர்பின், ஹோஸ்டோமெல் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து வழித்தடங்கள் அமைக்கப்படும்.

    ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிக்கைல் மிசிண்ட்செவ் போர் நிறுத்தத்தின்போது, ரஷ்யப் படைகள் “அமைதியைக் கடைபிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, போர் நிறுத்தத்திற்கான இரு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும், செவ்வாய்க்கிழமை சுமியிலிருந்து சுமார் 7,000 பேர் வெளியேறியுள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தோம்.

  5. குறைந்தது ஒரு நகரத்தில் மக்களை வெளியேற்றும் பணிகள் நிறுத்தம் என தகவல்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் ஆறு நகரங்களில், அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற 12 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு யுக்ரேன் மற்றும் ரஷ்யா சம்மதித்துள்ளதாக, நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

    ஆனால், திட்டமிட்டபடி பொதுமக்களை வெளியேற்ற முடியவில்லை என நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

    • கிழக்கு யுக்ரேனில் உள்ள ஐசியம் நகரத்தில், “ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால்” அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இடர்பாடுகள் ஏற்படுவதாக, அப்பகுதி அதிகாரி தெரிவித்துள்ளார். புறநகர் பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறுவதால் மனிதநேய வழித்தடம் மூலம் மக்களை வெளியேற்ற முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    • தென்கிழக்கு நகரமான மரியுபோலில் நிலைமை தெளிவற்றதாக உள்ளது. மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ரஷ்யா தொடர்ந்து இடைமறிப்பதாகவும், மனிதநேய உதவிகள் சென்றடைவதை தடுப்பதாகவும், யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அங்கு நிலவும் களச்சூழலை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
    • வடகிழக்கு நகரமான சுமியில் நிலைமை வேறாக உள்ளது. இன்று காலை முதல் தனியார் கார்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதாக, அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
    • தெற்கு யுக்ரேனில் உள்ள எனெர்ஹோடாரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாக, அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
  6. கோகுல்ராஜ் கொலை: `சாதி வெறியின் மற்றொரு ரத்த சரித்திரம்' -தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

      • எழுதியவர், ஆ விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    கோகுல்ராஜ் வழக்கு

    பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK

    சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

  7. யுக்ரேன் அதிபர் மனைவி ஒலேனா ஸெலென்ஸ்கா: திரைக்குப் பின்னிருந்து முக்கியப் பங்காற்றும் பெண்மணி

    ஒலேனா ஸெலென்ஸ்கா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த தகவலையடுத்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "எனக்கு தேவை ஆயுதங்கள்தான். போக்குவரத்து அல்ல." என்று நேரடியாக பதிலளித்தார்.

  8. செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம்: யுக்ரேன்

    செர்னோபிள் அணுமின் நிலையம்

    பட மூலாதாரம், Getty Images

    செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.

    யுக்ரேனிய அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க முடியாது என்பதால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக, டெலகிராம் செயலியில் அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், இரு வாரங்களுக்கு முன் செர்னோபிள் அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிய போது ஏற்பட்ட சேதத்தால், அணுமின் நிலையத்திற்கு செலுத்தப்படும் உயர் மின்னழுத்த இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    அணுமின் நிலையத்தின் கண்காணிப்பு தகவல்களை யுக்ரேனால் அணுக முடியாது எனவும், இதனால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய முடியாது எனவும், யுக்ரேனின் எரிசக்தித்துறை அமைச்சர் ஜெர்மன் கலூஷ்சென்கோ பிபிசியிடம் தெரிவித்தார்.

    “எவ்வளவு விரைவாக முடியுமோ, இதனை சரிசெய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார். ஆனால், “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் செயல்படுவதற்கென சிறப்பு பாதுகாப்பு அமைப்பு உள்ளது” எனவும், இதன்மூலம் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் சில தினங்களுக்கு அணுமின் நிலையத்திற்கு மின் இணைப்பை வழங்க முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.

    செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கண்காணிப்பு தகவல்களை பெறுவது நின்றுவிட்டதாக, சர்வதேச அணுசக்திக் கழகம் முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும், கடந்த இரு வாரங்களாக அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுமார் 210 பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாகவும் அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.

  9. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற தேர்தலுக்கு அரையிறுதியா? இவை ஏன் நமக்கு முக்கியம்?

      • எழுதியவர், எம். ஏ. பரணிதரன்
      • பதவி, பிபிசி தமிழ்
    வாக்குப்பதிவு இயந்திரம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின. அதில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜகவுக்கு சாதகமான நிலையும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பும், கோவாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

  10. ‘ஆபரேஷன் கங்கா’: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

    பியூஷ் கோயல்

    பட மூலாதாரம், ANI

    யுக்ரேனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன. யுக்ரேனில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உதவாமல், அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். யுக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கவலை கொண்டுள்ளார்.

    யுக்ரேனில் சிக்கிய 18,500 மாணவர்களின் குடும்பத்தினரை எங்கள் கட்சியினர் தொடர்புகொண்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். அவர்களின் குறைகளை மத்திய அரசுக்கு அனுப்பினர்.

    யுக்ரேனில் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றுவதில் பல நாடுகள் இடர்ப்பாடுகளை சந்தித்தன. அண்டை நாடுகள் மூலமாக, குடிமக்களை இந்தியா தொடர்ந்து வெளியேற்றிவருகிறது. தங்களின் செல்லப் பிராணிகளையும் அவர்கள் தங்களுடன் அழைத்துவந்துள்ளனர். நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமக்களையும் யுக்ரேனிலிருந்து வெளியேற்றியுள்ளோம்.

    யுக்ரேன் விவகாரம் குறித்து இந்திய அரசு பிப்ரவரி 15 ஆம் தேதி அறிவுறுத்தலை வழங்கியது. அதன்பின்னர் இரண்டு அறிவுறுத்தல்களை வழங்கினோம். அங்கு போர் தொடங்குவதற்கு முன்பே 4,000 பேர் இந்தியா வந்துவிட்டனர். அங்கிருந்து இன்னும் பலர் வந்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் அறிவுறுத்தலை மாணவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அல்லது அவர்களின் பல்கலைக்கழகங்கள் அவர்கள் யுக்ரேனிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை” என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.

    இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

  12. இந்திய அதிகாரிகளால் யுக்ரேனிலிருந்து காப்பாற்றப்பட்ட பாகிஸ்தான் மாணவி: பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்து வீடியோ

    பாகிஸ்தான் மாணவி

    பட மூலாதாரம், Asma Shafique

    யுக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவரும் பணியில் இந்திய அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், யுக்ரேனிலிருந்து வெளியேற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் இந்திய அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த மாணவி அஸ்மா ஷஃபீக் என்பவர் தற்போது மேற்கு யுக்ரேனுக்கு செல்கிறார். அங்கிருந்து அவர் யுக்ரேனிலிருந்து வெளியேற உள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    அந்த மாணவி இந்திய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வீடியோவில், “கீயவ்வில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி. நாங்கள் இங்கு மோசமான சூழலில் சிக்கியிருந்தோம். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி. இந்திய தூதரகத்தால் நாங்கள் வீட்டுக்குப் பாதுகாப்பாக சென்றடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா உதவுவது இது முதன்முறை அல்ல. யுக்ரேனில் சிக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் அங்கிருந்து வெளியேற்றியதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்திய அரசின் உதவியால் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. பேரறிவாளனுக்கு ஜாமீன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    பேரறிவாளன்

    பட மூலாதாரம், TWITTER

    பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறை.

    "மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

  14. ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?

      • எழுதியவர், பால் கிர்பி
      • பதவி, பிபிசி நியூஸ்
    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

    நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய யுக்ரேனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. யுக்ரேன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும், அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.

    30 நாடுகளின் தற்காப்புக் கூட்டணியான நேட்டோவுடன் அது இணையாது என்றும், யுக்ரேன் ராணுவ விலக்கலை மேற்கொண்டு, நடுநிலை நாடாக மாற வேண்டும் என்றும் மேற்கத்திய நாடுகள் மற்றும் யுக்ரேனிடம் இருந்து புதின் உத்தரவாதம் கோரியுள்ளார்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    பேரறிவாளன்

    பட மூலாதாரம், TWITTER

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஜாமீன் வழங்க மத்திய அரசு தெரிவித்த எதிர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ளார்.

  16. “புதினை தடுத்து நிறுத்தவில்லை என்றால் நமக்கு பாதுகாப்பான இடம் இருக்காது”: யுக்ரேனின் முதல் பெண்மணி கடிதம்

    ஒலேனா ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், UKRAINE PRESIDENT

    யுக்ரேனின் முதல் பெண்மணி ஒலேனா ஸெலென்ஸ்கி, சர்வதேச சமூகத்தை நோக்கி, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தில் போரின் பயங்கரங்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் செலுத்தும் தாக்கம் குறித்து விவரித்துள்ளார். இந்த போரில் இதுவரை உயிரிழந்த சில குழந்தைகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்:

    • “ஓக்டிர்காவின் சாலையில் எட்டு வயது சிறுவன் ஆலிஸ், அவனுடைய தாத்தா அவனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தான்.
    • “கீயவ்வில் போலினா என்பவர், ஷெல் தாக்குதலில் தன் பெற்றோர்களுடன் உயிரிழந்தாள்.
    • “ஆர்செனி என்ற 14 வயது சிறுவன், தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தான். தீவிரமான தாக்குதல்கள் காரணமாக, உரிய நேரத்தில் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால், அவரை காப்பாற்ற முடியவில்லை.

    “’பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை’ என ரஷ்யா கூறுகிறது, நான் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயர்களை முதலில் கூறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சமூகம் மற்றும் யுக்ரேனிலிருந்து அகதிகளை ஏற்றுக்கொண்ட அண்டை நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற தன் கணவரும் யுக்ரேன் அதிபருமான ஸெலென்ஸ்கியின் வேண்டுகோளை மீண்டும் அவர் வலியுறுத்தினார். நேட்டோ இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளது, ஏனெனில் இது ரஷ்ய விமானங்களுடன் ராணுவ ரீதியாக ஈடுபடும் மேற்கத்திய படைகளை உள்ளடக்கும்.

    “யுக்ரேனிய வான்பகுதியை மூடுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களுக்குத் தேவை. இதனை செய்தால், போரை எங்களால் சமாளிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    “யுக்ரேனில் நடக்கும் போர் ‘எங்கோ நடப்பது அல்ல’. ஐரோப்பாவில் நடக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அருகில் நடக்கும் போர் என இக்கடிதம் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

    “அணு ஆயுதப் போர் குறித்து அச்சுறுத்தும் புதினை நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் யாருக்கும் இந்த உலகில் பாதுகாப்பான இடம் என்பது இருக்காது” என தெரிவித்துள்ளார்.

  17. யார் இந்த புதின்? - அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. ராமர் பால விவகாரம்: இதுவரை நடந்தது என்ன?

      • எழுதியவர், மு.பிரசாந்த்
      • பதவி, பிபிசி தமிழ்
    மன்னார் வளைகுடா

    பட மூலாதாரம், NASA

    இந்தியாவின் நெடுங்கால விவாதங்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் ராமர் பால விவகாரத்துக்கு அதில் நிச்சயம் இடமுண்டு. அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வாதப்பிரதிவாதங்களால் அரசியலாக மாறி நிற்கும் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

  19. சமரசத்தை நோக்கி செல்கிறாரா யுக்ரேன் அதிபர்?

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

    “எங்களை இணைத்துக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்ட பின், நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற என் மனநிலை மாறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

    “ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில்கொண்டே நேட்டோ அமைப்பு யுக்ரேனை சேர்த்துக்கொள்ள அஞ்சுவதாக” ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும், எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக யுக்ரேன் இருக்கக்கூடாது என தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ படையில் சேராமல் இருப்பது, கிரைமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிப்பது, டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமானவை என அங்கீகரிப்பது ஆகிய ரஷ்யாவின் 3 வலியுறுத்தல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸெலென்ஸ்கி, தான் இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

  20. யுக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    யுக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர்வதற்கான சாத்தியங்களை இந்திய அரசும் மாநில அரசும் ஆராய வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "யுக்ரேனிலிருந்து திரும்பும் இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், அவர்களை இந்தியாவில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ இடங்கள் குறைவாகவே உள்ளன.

    கொரோனா முடக்கத்தின் போது சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியவில்லை. அவர்கள் அர்மேனியா சென்று மருத்துவப் படிப்பை தொடர்கின்றனர்.

    யுக்ரேனில் இருந்து திரும்ப மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர்வதற்கான சாத்தியங்களை இந்திய அரசும் மாநில அரசும் ஆராய வேண்டும்.

    ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால் சீனாவில் படித்த மாணவர்களைப் போல இந்தியாவுடன் ராஜாங்க ரீதியாக நல்ல உறவை வைத்துள்ள வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

    இது ஒரு அசாத்தியமான சூழ்நிலைதான். யுக்ரேனுக்கு படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும்.

    கோவை மாணவர் சாய் நிகேஷ் யுக்ரேனுக்கு ஆதரவாக போரிட சென்றிருப்பது அபாயகரமானது.