நன்றி நேயர்களே...
மார்ச் 8ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் கீயவ், மேரியோபோல், சுமி போன்ற நகரங்களிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் சிக்கி வருகின்றனர்.
- முக்கிய ரஷ்ய ராணுவ கமாண்டர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக யுக்ரேனிய பாதுகாப்புத் துறையின் உளவு சேவை தெரிவித்துள்ளது.
- பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
- கீயவில் உள்ள தனது அலுவலகத்தில் தான் இருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி சமீபமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
- யுக்ரேனிலிருந்து மேலும் 410 இந்தியர்கள் நாடு திரும்பினர்
- ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்
- ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்
- சுமி வான் தாக்குதலில் 9 பேர் பலி
பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்














