தொடரும் ஷெல் தாக்குதல்: நெருப்பை அணைக்க, நெருங்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்
சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஷெல் தாக்குதல்கள் நடப்பது பற்றிய செய்திகள் தொடர்பாக யுக்ரேனிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது.
அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷ்ய படைகள், “கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,” என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார்.
“ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது,” என்று ஆண்ட்ரி டூஸ் டெலிக்ராமில் ஒரு காணொளியில் கூறினார் என்கிறது அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் நேரடி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், பற்றி எரியும் நெருப்பை அணைக்கை தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும் டூஸ் கூறினார்.
மேலும், தீப் பிடித்து எரியும் அணு உலை தற்போது செயல்பாட்டில் இல்லை, அது புதுப்பிக்கப்படுகிறது இருப்பினும், அங்கு அணு உலைக்கான எரிபொருள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை ஸபோரிஷியா அணு மின் நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

