மலையாள திரையுலகில் பிரபல நடிகரான கோட்டயம் பிரதீப் இன்று காலமானார். அவருக்குவயது 61. அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
கோட்டயம் பிரதீப்
தமிழில் 'ராஜாராணி', 'விண்ணைத்தாண்டிவருவாயா', நடிகர்விஜய்யின் 'தெறி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத் திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடித்துவந்த கோட்டயம் பிரதீப், மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது இறப்பு செய்தியை நடிகர் பிரித்விராஜ் தனது சமூக
வலைதள பக்கங்களில் உறுதி செய்துள்ளார். அவரது புகைப்படத்தை பகிர்ந்து ’ஆத்மா
சாந்தி அடையட்டும்’ என தனது இரங்கலை நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ம்ஆண்டு தனது 40வது வயதில்தான் கோட்டயம் பிரதீப் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
அதற்கு முன்பு படங்களில் சிறுசிறு வேடங்களில்
நடித்து வந்தவர் ஐவி சசி இயக்கத்தில் ’இ நாடு என்னாலே வரே’ என்ற படத்தின்மூலம் பலருக்கும்
பரிச்சயமானார்.
அதிகஅளவில்நகைச்சுவைகதாப்பாத்திரங்களில்நடித்தஇவர் 'ஒருவடக்கன்செல்ஃபி', 'அமர்அக்பர்ஆண்டனி' உள்ளிட்ட 70க்குமேற்பட்டபடங்களில்நடித்திருக்கிறார்.
இவருக்கு மாயா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப்பின் இந்த திடீர் மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில்
தெரிவித்துவருகின்றனர்.