ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதை நாங்கள் காணவில்லை: யுக்ரேன் அதிபர்

எல்லையிலிருந்து சில படைவீரர்களை திரும்பி வாபஸ் பெற்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதுகுறித்து யுக்ரேனிய அதிபர் வாலடிமீர் செலன்ஸ்கி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    மேலதிகச் செய்திகளுக்கு முகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இன்றைய முக்கிய செய்திகள்

    • பிரபல இந்தி, வங்க மொழிப் பாடகர், பாலிவுட் இசையமைப்பாளர், பாஜகவில் இணைந்த அரசியல்வாதி என்ற பல முகங்களை உடைய பப்பி லஹரி மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலை காலமானார்.
    • யுக்ரேன் நெருக்கடியால் அங்கு தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என்று இந்திய தூதரகம் உறுதியளித்துள்ளது
    • சீனவைச் சேர்ந்த ஹுவாவாய் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது
    • சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
  2. ரஷ்யா படையெடுத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும்: நேட்டோ தலைவர்

    நேட்டோ

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

    ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 2014 இல் ரஷ்யா க்ரைமியாவை இணைத்தபோது இருந்ததை விட யுக்ரேன் இப்போது சிறந்த பயிற்சி மற்றும் ஆயுத வலிமை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்யா முடிவெடுப்பதில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டாலும், “படைகளை இணைத்து ஒரு சுதந்திர நாட்டை அச்சுறுத்த முடியும்” என்று காட்ட நினைக்கிறார்கள். அது மிகவும் தீவிரமானது என்று ஸ்டோல்டன்பர்க் கூறினார்.

    ப்ரசல்ஸ் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதைக் கூறினார்.

  3. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்
    படக்குறிப்பு, பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

    தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    “தமிழகம் முழுவதும் பரப்புரை செய்து வருகிறேன். திரளான பொதுமக்கள் வந்து பேச்சை கேட்கின்றனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்று தர வேண்டும்.

    தமிழகத்தில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுகவுக்கு தைரியமில்லை.

    கரோனா காலத்திலும் கொள்ளை அடித்த ஆட்சி அதிமுகவாகும். திமுக பதவி ஏற்பதற்கு முன்பு வரை 1 கோடி தடுப்பூசி தான் மக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆனால், திமுக பதவிக்கு வந்ததும் 10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதனால்தான் மூன்றாவது அலையில் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    அதிமுகவினர் ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.5.75 லட்சம்கோடி கடன் பெற்று கஜானாவை காலி செய்துவிட்டு சென்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3 மாதத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கி உள்ளோம்.

    பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார்.

    மேலும், நிறைய வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இந்த தேர்தல் வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றார்.

  4. கோவையில் உள்ள கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்

    வானதி சீனிவாசன்
    படக்குறிப்பு, செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்

    கோவையில் உள்ள கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கோவையில் நேற்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக, பாஜகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், "கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    நேரடியாக பிடித்து ஒப்படைத்தும் வீடியோ ஆதாரங்களை வழங்கியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. பல இடங்களில் காவல்துறை பணப்பட்டுவாடா செய்ய ஆளுங்கட்சியினருக்கு உறுதுணையாக இருக்கிறது.

    திமுக கோவை மாவட்டத்தை வெல்ல வேண்டும் என்பதை மானப் பிரச்னையாக கருதி கலவரத்தைத் தூண்டுகிறது. வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    ஆட்சியில் உள்ள எட்டு மாதங்களில் திமுக அரசு கோவையில் எந்த விதமான தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக வேட்பாளர்களை மிரட்டியும் பணம் கொடுத்தும் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்" என்றார்.

  5. கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    நீங்கள் கடைகளில் வாங்கும் சாதாரணமான முகக் கவசங்கள் உங்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்காது. ஏனென்றால், அவை பெரும்பாலும் மிகவும் வலுவிழந்து இருக்கும், கண்களை மறைக்காது, பல நாட்கள் நீடித்து உழைக்காது.

    ஆனால், நோய்த்தொற்று உள்ள ஒருவரின் உமிழ்நீர் மற்றவர்கள் மீது பட்டு, அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவை உதவும். நினைவில்கொள்ளுங்கள், இந்த சார்ஸ்-சிஓவி-2 வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலரிடம் அறிகுறிகள் தெரிவதில்லை.

    எனவே, பொதுவெளியில், முகமூடி அணிந்து செல்வது என்பது, பொதுவாகவே நமக்கு நன்மை அளிக்கும் ஒரு விஷயம்தான்.

  6. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை திமுக ஆதரிப்பது ஏன்?

      • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
      • பதவி, பிபிசி தமிழ்
    சென்னை மாநகராட்சி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடப்பது என்பது சிறிய கட்சிகளின் நலன்களுக்கு முரணானது என்றும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இடங்களில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்காதா என்ற குரல்களும் இருக்கின்றன.

    "இந்த மறைமுகத் தேர்தலை எதிர்ப்பவர்கள் இதனை அறிமுகப்படுத்தியவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். இந்த முறையை அறிமுகப்படுத்தியது யார்? மு.க. ஸ்டாலின் நேரடியாகத்தான் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதாதான் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, அவரை நீக்கி, கராத்தே தியாகராஜனை மேயராக்கினார்" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன்.

  7. யுக்ரேன் நெருக்கடி: இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை அதிகரிக்கப்படும் – இந்திய தூதரகம் உறுதி

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், யுக்ரேனில் வசிக்கும் இந்தியர்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்படும் என, யுக்ரேன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. இந்திய குடிமக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும், தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    நெருக்கடி நிலையில், இந்தியர்கள் எழுப்பிவரும் பல்வேறு கேள்விகளுக்கு இந்திய தூதரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளது.

    அதில், “இந்திய குடிமக்கள் பீதியடையாமல் நிதானமாக இருப்பது முக்கியம். இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப நினைக்கும் இந்தியர்கள், விமானத்தில்பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், “இந்தியா மற்றும் யுக்ரேனுக்கு இடையில் விமான சேவையை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “தற்போதைக்கு டெல்லி மற்றும் யுக்ரேனுக்கு இடையில் ஒரு விமான சேவை (யுக்ரேன் சர்வதேச ஏர்லைன்ஸ்) உள்ளது. இதுதவிர, ஷார்ஜா, துபாய், ஆல்மட்டி, பிராங்க்பர்ட் மற்றும் தோஹாவிலிருந்து இணைப்பு விமானங்கள் உள்ளன”. எனகூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

    பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம்

    மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக 10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது.

    தமிழன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த இனக்குழுவிற்கும் தனித்த மொழி, கலாசார அடையாளங்கள் இருக்குமே தவிர, தனித்த மரபணு தொகுப்பு அமைப்பு, அறிவியல் ரீதியாக இல்லவே இல்லை.

    இதுகுறித்து அறிவியல் சொல்வது என்ன? இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள்:

  9. யுக்ரேன் நெருக்கடி: இன்று நடந்த நிகழ்வுகள் என்னென்ன?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில் இன்று ஒரே நாளில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், இன்று என்னென்ன நடந்தது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்:

    • யுக்ரேன் எல்லையிலிருந்து இன்னும் கூடுதலான படைகளை வாபஸ் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்தது. இந்த முறை கிரீமியா தீபகற்பத்திலிருந்து படைகளை திரும்பப் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில் சூழல் இன்னும் தணியவில்லை எனவும், ரஷ்யா தன் “படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது” எனவும் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் எல்லையிலிருந்து “ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதை நாங்கள் காணவில்லை” என, யுக்ரேன் அதிபர் வாலடிமீர் செலன்ஸ்கி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசிக்க பிரசல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
    • யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரு வங்கிகளின் இணையதளங்கள் மீது செவ்வாய்க்கிழமை தொடர் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றன.
    • ரஷ்யா யுக்ரேன் மீது இன்று படையெடுக்கும் என அமெரிக்க கூறிவந்த நிலையில், இன்றைய தினத்தை "ஒற்றுமை நாளாக” யுக்ரேன் கடைபிடித்தது.
  10. வரலாற்றில் ஆர்வமுடையவரா நீங்கள்?

    எகிப்து

    பட மூலாதாரம், Getty Images

    உலகளாவிய மற்றும் இந்திய அளவிலான பல சுவாரஸ்ய வரலாறுகள் குறித்த கட்டுரைகளை பிபிசி தமிழ் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. வரலாறு குறித்து அறிவதில் நீங்கள் ஆர்வமுடையவர் என்றால், பலவித சுவாரஸ்ய, அரிதான தகவல்கள் அடங்கிய இக்கட்டுரைகளை வாசியுங்கள்:

  11. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டி - டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு

    கிரிக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    கொல்கத்தாவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு இளம் பந்துவீச்சாளரான ரவி பிஸ்னாய் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இவர் 2020ல் அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹர், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், சஹல், ரவி பிஸ்னாய்

  12. மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம்

    முத்தம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    ஓவிட் என்ற கவிஞர், தனது கவிதைகளில், மார்பில் பழுக்க வைக்கும் ஆப்பிள்கள் போன்றவை முத்தங்கள் என்று வர்ணிக்கிறார்.

    மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

  13. ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதை நாங்கள் காணவில்லை: யுக்ரேன் அதிபர்

      • எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்டு
      • பதவி, பிபிசி கிழக்கு ஐரோப்பிய நிருபர்
    யுக்ரேன் நெருக்கடி
    படக்குறிப்பு, தங்கள் நாட்டின் 'ஒற்றுமை நாள்' நிகழ்வில் பங்கெடுத்த செலன்ஸ்கி.

    எல்லையிலிருந்து சில படைவீரர்களை திரும்பி வாபஸ் பெற்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதுகுறித்து யுக்ரேனிய அதிபர் வாலடிமீர் செலன்ஸ்கி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

    மேற்கு யுக்ரேனில் உள்ள ராணுவ பயிற்சி தளத்திலிருந்து, பிபிசிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், யதார்த்தத்திற்கு ஏற்ப நாங்கள் எதிர் வினையாற்றியுள்ளோம். படைகள் திருப்பி அழைக்கப்பட்டதை நாங்கள் காணவில்லை. அதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டோம்” என்றார்.

    “அனைத்து சாதாரண மக்களும் இச்சூழ்நிலை தணிய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்” என தான் நினைப்பதாக அவர் கூறினார்.

    “எவ்வித அச்சுறுத்தல் குறித்தும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என பலமுறை கூறியுள்ளேன். ஏனெனில், இவை அனைத்தும் நேற்று தொடங்கியவை அல்ல என்பதை நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். பல ஆண்டுகளாக இது நடந்துகொண்டிருக்கிறது” என கூறினார்.

    படைகள் வாபஸ் பெறுவதை, “அனைவரும் காண வேண்டும்” என கூறியுள்ள செலன்ஸ்கி, ராணுவமோ அல்லது உளவு அமைப்புகளோ மட்டும் பார்க்கக்கூடாது என தெரிவித்தார்.

    "இப்போதைக்கு அவை வெறும் அறிக்கைகள் மட்டுமே"என்றார்.

  14. ராமநாதபுரம் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்: சிக்கலுக்கு தீர்வு என்ன?

      • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
      • பதவி, பிபிசி தமிழ்
    மீனவர்கள்
    படக்குறிப்பு, மீன் பிடிக்கு தயாராகும் மீனவர்கள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதால், கரையோரங்களில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறுகின்றனர்.

    குறிப்பாக கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் தொலைவுக்குள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதியில் இது நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இப்படி நடக்கவில்லை என்கிறார்கள் விசைப்படகு மீனவர்கள்.

    இந்த சிக்கலால், நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 281.47 கி.மீ நீளத்திற்கு நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் முதன்மையானது என்பதால், ராமேஸ்வரம், மண்டபம், மூக்கையூர், பாம்பன், தொண்டி, தேவிப்பட்டினம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

  15. சீன நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    ஹ்வாவே

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, ஹ்வாவே - சித்தரிப்புப் படம்

    இந்தியாவில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹ்வாவேவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில், வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வருமான வரித்துறை இன்று (பிப். 16) சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    டெல்லி, குருகிராம் (ஹரியாணா) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய பகுதிகளில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப். 15) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அந்நிறுவனத்திற்கு எதிராக வரி ஏய்ப்பு புகார் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் நிதி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, தங்களின் நிறுவனம் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  16. “அரவிந்த் கேஜ்ரிவால் பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தார்”: குமார் விஷ்வாஸ் குற்றச்சாட்டு

    குமார் விஷ்வாஸ்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, குமார் விஷ்வாஸ்

    கவிஞரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பகால தலைவர்களுள் ஒருவருமான குமார் விஷ்வாஸ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப்பில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அவர் கூறுகையில், “ஒருமுறை அவர் என்னிடம் கூறும்போது தான் பஞ்சாப்பின் முதல்வராவேன் அல்லது சுதந்திரமான தேசத்தின் (காலிஸ்தான்) முதல் பிரதமராவேன்” என தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    அரவிந்த் கேஜ்ரிவால் மீது குமார் விஷ்வாஸ் குற்றம்சாட்டும் வீடியோவை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா, “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால், மிகவும் ஆபத்தானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  17. அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.110 கோடி முடக்கம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

      • எழுதியவர், ஆ விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்
    எஸ்.பி. வேலுமணி

    பட மூலாதாரம், S.P. VELUMANI

    படக்குறிப்பு, எஸ்.பி. வேலுமணி, தமிழக முன்னாள் அமைச்சர் (அதிமுக)

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாகச் சொல்லப்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.110 கோடி ரூபாயை சிறப்பு நீதிமன்றம் முடக்கியுள்ளது. ` இது தொடக்கம்தான். ஊழல் செய்து சேர்த்த சொத்துகளை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பது அடுத்தகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்கிறது அறப்போர் இயக்கம்.

    ரூ.811 கோடிக்கு ஊழலா?

    அ.தி.மு.கவின் 2016-2021 ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்தியது. குறிப்பாக, சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், கோயம்புத்தூர், சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர் அன்பரசனின் இல்லம், கே.சி.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், இந்த நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஆகியோரின் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகள் என சுமார் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

  18. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்

      • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
      • பதவி, பிபிசி தமிழ்
    வாக்காளர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வாக்காளர் அடையாள அட்டையோடு வாக்காளர்கள். மாதிரிப் படம்

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்தல்கள் எப்படி நடைபெறும், மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள்?

    வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தபின் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது.

  19. லஸ்ஸா காய்ச்சல்: பிரிட்டனில் பச்சிளம் குழந்தை பலி - இந்த நோய் பற்றிய முக்கியத் தகவல்கள்

    லஸ்ஸா வைரஸ்

    பட மூலாதாரம், Alamy

    படக்குறிப்பு, எபோலா வைரஸ் வகையுடன் தொடர்புடைய லஸ்ஸா வைரஸ் பல ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக இருப்பது.

    பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

    ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால் இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

    இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய்த் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று.

    இதில் இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அட்டன்புரூக் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  20. உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல்: மார்ச் 10ஆம் தேதி முடிவுகள்

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெற்று வருகிறது.

    ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும்.

    உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 62.4 சதவிகிதமும், பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 61 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.