யுக்ரேனை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்
யுக்ரேன்னில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக யுக்ரேனை விட்டு வெளியேறுமாறும், குறிப்பாக அத்தியாவசிய தேவையில்லாத மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேவைப்படும்போது தூதரக அதிகாரிகள் அவர்களைச் சென்றடையும் வகையில் தாங்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து தெரிவிக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
யுக்ரேனில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து தூதரக சேவைகளையும் வழங்க தூதரகம் வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.