தமிழகத்தில் இன்று 3,086 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,31,154ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இன்று (பிப்.
11) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“தமிழகத்தில் தற்போது வரை 56,002 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இன்று
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,06,514.
இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின்
எண்ணிக்கை 1,01,830.
தமிழகத்தில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார்
சார்பாக 263 என, 332 கொரோனா
பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று
மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,051. இதனால், கொரோனா தொற்றிலிருந்து
குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,37,265ஆக உள்ளது.
இன்று
கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனைகளில்
14 பேர், அரசு மருத்துவமனைகளில் 11 பேர் என,
25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,887ஆக உயர்ந்துள்ளது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.