திருப்பூர் மாவட்டத்தில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் சென்றுவிட்டு, நேற்று மாலை
திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே அமராவதி
ஆற்றில் குளிக்க ஆற்றில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர்கள்
சிலர் புதை மணலில் சிக்கினர். அருகிலிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற
முயற்சித்தினர். ஆனாலும், ரஞ்சித், ஸ்ரீதர், யுவன்,
மோகன், சக்ரவர்மன், மற்றும்
அமிர்த கிருஷ்ணன் ஆகிய 6 இளைஞர்கள் புதை மணலில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்
பணித்துறையினர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் குளிக்கச் சென்ற இடம் ஆழம் மற்றும்
புதைமணல் நிறைந்த பகுதி. அதை அறியாமல் இளைஞர்கள் இறங்கி விட்டதாக தீயணைப்பு துறையினர்
தெரிவித்தனர்.
அமராவதி ஆற்றில் இதே போல சமீப காலங்களில் 10க்கும் மேற்பட்டோடர்
புதைமணலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதே போல், நேற்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் அருகே கல்லாறு தடுப்பணையில் குளிக்க சென்ற 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.