தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி கோரி தமிழ்நாடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், அதிமுக நவநீதகிருஷ்ணன்,
காங்கிரஸ் ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
செல்வராஜ், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன்,
விசிக திருமாவளவன், ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
நவாஸ்கனி ஆகியோர் டில்லியில் தங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 3 முறை முயற்சித்தனர்.
ஆனால், சந்திக்கவில்லை. கோரிக்கை மனுவை அலுவலகத்தில் கொடுத்தனர்.
இதையடுத்து, ''அரசியல் காரணங்களுக்காக உள்துறை அமைச்சர்
சந்திக்க மறுக்கிறார். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்காமல் இருப்பது
ஜனநாயக விரோதம்'' என்று அனைத்துக் கட்சி குழு தெரிவித்தது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று மாலை சந்திக்க உள்ளனர்.
இந்த குழுவில், திமுக டி.ஆர்.பாலு, காங்கிரஸ் ஜெயகுமார், அதிமுக நவநீதகிருஷ்ணன், மதிமுக வைகோ, விசிக ரவிகுமார், பா.ம.க ஜி.கே. மணி எம்.எல்.ஏ, சி.பி.எம் பி.ஆர். நடராஜன் எம்.பி, சி.பி.ஐ - டி.ராமசந்திரன்
எம்.எல்.ஏ ஆகியோர் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.