அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளை பிடித்த மண்ணின் மைந்தன் கார்த்திக் முதலிடம்

அவனியாபுரத்தில் நடைபெற்ற வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 60‌க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இந்திய பிரதமர் மோதி பொங்கல் வாழ்த்து - எழுச்சிமிக்க கலாச்சார அடையாளம்

    மோதி பொங்கல் வாழ்த்து

    பட மூலாதாரம், Narendra Modi

    படக்குறிப்பு, இயற்கை உடனான பிணைப்பும் சமூகத்தின் சகோதர உணர்வும் இன்னும் ஆழமாக பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்புமிகு நாளில் அனைவருக்கும் குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

    இயற்கை உடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதர உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்.'' என்று மோதி தெரிவித்துள்ளார்.

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - மோதி & அமித் ஷாவுக்கு வாழ்த்து

    "உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும்,அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும். அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #பொங்கல் திருநாள் வாழ்த்துகள்." என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    மேலும் "தமிழக சகோதர சகோதரிகள் சார்பாக மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சருக்கு தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறையட்டும்" என ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதே போல "தைப் பொங்கள் நன்நாளில், நரேந்திர மோதி ஜி அவர்கட்கு என் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என மற்றொரு ஆங்கில டுவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

  3. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து -

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்.

    இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  4. ஹவானா சிண்ட்ரத்தால் மேலும் 4 அமெரிக்க அதிகாரிகள் பாதிப்பு

    ஆண்டனி பிளிங்கன்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, ஆண்டனி பிளிங்கன்

    ஜெனீவா மற்றும் பாரீஸ் நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அமெரிக்காவின் அதிகாரிகள் நான்கு பேர், சந்தேகத்துரிய நரம்பியல் சார் நோயான 'ஹவானா சிண்ட்ரத்தால்' பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜெனீவாவில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று அமெரிக்க அதிகாரிகளுக்கும்,பாரீஸ் நகரத்தில் ஒரு அதிகாரியும் கடந்த கோடை காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்மப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

    அமெரிக்காவின் எதிரிகள், அந்நாட்டு ராஜ்ஜிய விவகார அதிகாரிகளை மைக்ரோவேவைக் கொண்டு இலக்கு வைக்கப்படுகிறார்களா என்றும் அச்சம் நிலவுகிறது. இந்த ஹவானா சிண்ட்ரம் கடந்த 2016ஆம் ஆண்டு கியூபாவில் முதல் முறையாக ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

  5. இராக்கிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் ஏவுகணை தாக்குதல்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இராக்கின் முக்கிய நகரமான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் இராக் ராணுவம் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  6. மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் நீராடிய மக்கள்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மேற்கு வங்கத்தில், மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கங்கா சாகரில் புனித நீராடிய மக்கள்.

  7. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - 700 காளைகள் பங்கேற்பு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம், Natraj

    படக்குறிப்பு, கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு. .

    தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வெற்றி பெறும் வீரர் & காளைகளுக்கு கார், இருசக்கர வாகனம், தங்க காசு, பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில். 28 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி எழுத்தாளர் சு வெங்கடேசன் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

    Jallikkattu

    பட மூலாதாரம், Natraj

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் சாய்ராம் ஜெயராமன், கெளதமன் முராரி.