அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளை பிடித்த மண்ணின் மைந்தன் கார்த்திக் முதலிடம்

அவனியாபுரத்தில் நடைபெற்ற வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 60‌க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஜனவரி 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இன்று இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிக செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு என்ன காரணம்? விசாரணை குழு அறிக்கை

    பிபின் ராவத்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜெனரல் பிபின் ராவத்

    இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் சூலூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சம்பவம் தொடர்பாக முப்படைகளின் உயர்நிலைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை இல்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    பிபின் ராவத்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதி.
  3. தைப் பொங்கலில் தமிழர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து

    தைப் பொங்கலில் தமிழர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    உலக அளவில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று பிரிட்டன் மற்றும் கனடா. இந்த நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் கொண்டாடும் தைப் பொங்கலையொட்டி வாழ்த்துகளை பகிரும் காணொளியை அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிருவர். அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது பொங்கல் தின வாழ்த்துக் காணொளியை வெளியிட்டுள்ளார்.

    1.38 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் 'வணக்கம்' என்று தொடங்கிய தமது உரையை நிறைவு செய்யும் முன்பு 'நன்றி' என தமிழ் வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். ஆங்கிலத்தில் அவர் வழங்கிய வாழ்த்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ.

    "வணக்கம் மற்றும் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு திருவிழா, இதில் 'சமூக உணர்வு' எப்போதும் மிகவும் முக்கியமானது."

    "குடும்பம், நண்பர்களை சந்திப்பது மற்றும் உங்கள் அண்டை வீட்டாருடன் மீண்டும் இணைவது, நீண்ட காலமாக பார்க்காதவர்களுடன் கூடுவது இதன் சிறப்பு."

    "2021ஆம் ஆண்டில் நிலவிய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறிப்பாக இதயபூர்வமானதாக இருக்கும் என எனக்குத் தெரியும். மேலும் குறிப்பாக, இந்த பொங்கல் இனிப்பாக இருக்கும். அதே சமயம், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்."

    "நிச்சயமாக, உங்களுக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களைச் சந்திப்பதற்கு முன் ஒரு விரைவான சுய பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என்றால், உடனே அதற்கு முன்பதிவு செய்வதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்."

    "இந்த வார இறுதியில் நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்கும்போது, அவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்லுங்கள்."

    "பிரிட்டன் சுகாதார சேவையின் இணையதளத்தில் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துங்கள். அதை எப்படி பெறுவது என்பதை அந்த தளத்தில் கண்டறியலாம்."

    "எனது அருமையான தமிழ் சமூகம் தைப் பொங்கலைக் கொண்டாடும் போது, ​​மற்றவர்கள் நமது அருமையான தமிழ் சமூகத்துடன் அதை கொண்டாடும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்."

    "இந்த சமூகம் அளவில் சிறியதாக இருந்தாலும், நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்வின் அங்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாமல் நம் நாடு ஒதேவொன்று குறைவானதாகவே இருந்திருக்கும்."

    "எனவே தைப் பொங்கல் மற்றும் தமிழ் பாரம்பரிய மாதத்தின் மத்தியில் உற்சாகம் குறையாமல் தமிழர்கள் அனைவரும் ஒரு பெரிய நன்றியைச் சொல்ல சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம்."

    "நமது தமிழ் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கும். பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் அந்த நன்றியை உரித்தாக்குவோம். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தைப் பொங்கல், வளமான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக இது இருக்கும் என்று நம்புகிறேன்," என தமது வாழ்த்துச் செய்தியில் பேசியிருக்கிறார் போரிஸ் ஜான்சன்.

  4. கோவை: கொரோனா வார்டில் பொங்கல் கொண்டாட்டம்

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இன்று 1,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கோவையில் உள்ள கொடிசியா வளாகம் கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

    இன்று பொங்கல் தினம் என்பதால் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் வெளியிலிருந்து பொருட்களை மட்டும் வரவழைத்து தங்களுக்குள்ளாக பொங்கல் வைத்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.

  5. சேலம் வாழப்பாடி அருகே குட்டையில் மூழ்கிய இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

    சேலம் வாழப்பாடி அருகே குட்டையில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உயிரிழந்தனர்.

    சேலம் மாவட்டம் சின்ன கல்ராயன் மலை குப்பூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் - ஈஸ்வரி தம்பதிக்கு மூன்று வயதில் துளசிராம், துளசிதரன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    தமிழரசன் சின்ன கல்ராயன் மலை தெற்கு நாடு குப்பூர் கிராமம் பகுதியில் காடுகளில் கிடைக்கும் விறகுகளை சேகரித்து விற்று வரும் தொழிலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் தங்களுடைய இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு தமிழரசு விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றார்.

    பின்னர் அங்கு உள்ள சமவெளி பகுதியில் குழந்தைகள் துளசி ராமையும் துளசி தரனையும் விட்டு விட்டு அருகே உள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றனர்.

    தேவையான அளவு விறகு சேகரித்து விட்டு திரும்ப வந்து பார்க்கும்போது சிறுவர்கள் இருவரையும் காணவில்லை.

    இந்த நிலையில் அருகே இருந்த குட்டைக்கு சென்று பாத்தபோது அதில் இரண்டு சிறுவர்களும் சடலமாக மிதந்தனர்.

    இது குறித்து கேள்விப்பட்ட காவல்துரையினர் சம்பவ பகுதிக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  6. பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை

    பெரம்பலூர் ஜல்லிக்கட்டு
    படக்குறிப்பு, கொரோனா பரவல் குறைந்ததும் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுறுத்தல்

    பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம கமிட்டியினர் திட்டமிட்டனர். இதையடுத்து, வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது.

    இது குறித்த தகவலை வருவாய் மற்றும் காவல் துறையினர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

    மேலும், கொரோனா தொற்று பரவல் குறைந்து, பிப்ரவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

  7. ஒடிஷாவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி - உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு

    ஒடிஷா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திங்கியா கிராமத்தில் உருக்கு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இது குறித்து ஜகத்சிங்பூர் மாவட்ட காவல் கூடுதல் எஸ்.பி உமேஷ் பாண்டா கூறுகையில், ‘அங்கு 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக கூடினர். பேரணி நடத்த அனுமதி பெறவில்லை. அவர்களை கலைந்து போகச் சொன்னோம். ஆனால் தவறாக நடந்து கொண்டு, எங்களைத் தாக்கினர். எனவே, கூட்டத்தை கலைக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தினோம்,'' என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா

    இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்ரிக்காவில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா 2:1 என்கிற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று, தொடரை வென்றுள்ளது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. உத்தரபிரதேச தேர்தல்: பேட்டியிட வாய்ப்பு மறுப்பு - பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கதறல்

    உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டதாக, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அர்ஷத் ராணா அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

    அந்த காணொளியில், ''24 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றுகிறேன். கட்சி மேலிடத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், சரியான பதில் இல்லை. ரூ. 50 லட்சம் ஏற்பாடு செய்யும்படி கூறினார்கள். ஏற்கெனவே ரூ.4.5 லட்சம் கொடுத்துள்ளேன். தேர்தல் விளம்பரத்திற்கு ஏற்கெனவே நிறைய செலவு செய்து விட்டேன்.'' என்று அர்க்ஷத் ராணா கண்ணீர் விட்டபடி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் இளைஞர் கார்த்திக் முதலிடம் - கார் பரிசு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, முதலிடம் பிடித்த அவனியாபுரம் கார்த்திக்

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார், அந்த மண்ணில் பிறந்த இளைஞரான கார்த்திக்.

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.

    தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த போட்டியில் 624 காளைகள் பங்கேற்றன.

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று என்று 25 பேர் என மொத்தம் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

    ஆறு சுற்றுகளில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த 25 வீரர்கள் 7வது சுற்றில் பங்கேற்றனர்.

    இதில், கார்த்திக் என்பவர் 24 மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்றார்.அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவரது தனிப்பட்ட பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது.

    வலையங்குளம் முருகன் என்கிற மாடுபிடி வீரர் 19 காளைகளைப் பிடித்து இரண்டாமிடம் பிடித்தார். அவருக்கு போட்டியின் தொடக்கத்திலேயே காயம்பட்டது. ஆனாலும் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் களத்துக்குத் திரும்பி காளைகளை பிடித்தார். அவருக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    12 காளைகளை அடக்கிய பரத் மூன்றாமிடம் பிடித்தார். அவருக்கு பசுங்கன்று வழங்கப்பட்டது.

    மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயயம் என்பரின் காளை, சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் பரசாத வழங்கப்பட்டது.

    சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்ககாசு, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியின் நிறைவாக வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் முதலிடம் பெற்ற கார்த்திக் பேசும்போது, ''கடந்த முறை 16 மாடுகளை பிடித்தேன். இப்போது 24 மாடுகள் பிடித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஜல்லிக்கட்டு களத்தில் பல புதிய உறவுகளைப் பெற்றேன். அவர்கள் நிறைய ஊக்கப்படுத்தினார்கள். அனைவருக்கும் நன்றி.'' என்று கூறினார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம், Natrajan Sundar

    படக்குறிப்பு, சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்ககாசு, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
  11. இந்தியா ஓபன் பேட்மின்டன் சிங்கப்பூர் வீரர்களுக்கு வாழ்த்து

    இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதர் சைமன் வோங் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியா ஓபன் 2022 பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    அணியின் பயிற்சியாளர் கெல்வின் ஹோ மற்றும் யாப் கிம் ஹாக் தலைமையிலான சிங்கப்பூர் குழுவின் சிற்ந்த செயல்திறனால், சிங்கப்பூர் கொடியை பறக்க விட்டுள்ளனர்'. அனைவருக்கும் வாழ்த்துகள்.'' சைமன் வோங் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. புல்லி பாய் செயலி வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    புல்லி பாய் செயலி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களான ஸ்வேதா சிங், மயங்க் ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஸ்வேதா சிங்கை 14 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மற்றொரு நபரான மயங்குக்கு கொரோனா தொற்று இருப்பதால், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

    அதே சமயம், மயங்கின் வழக்கறிஞர் சந்தீப் ஷெர்கானே கூறுகையில், "ஸ்வேதா சிங், மயங்க் ஆகிய இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது," என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி படுகாயம் அடைந்த 18 வயது நபர் உயிரிழப்பு, நடராஜன் சுந்தர்

    ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, படுகாயம் அடைந்த பாலமுருகனை அவசர ஊர்தியில் ஏற்றும் மருத்துவ ஊழியர்கள்

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர் வரிசையில் இருந்த நபர் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

    இந்த போட்டியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற 18 வயதுடைய இளைஞர் ஜல்லிக்கட்டு பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து வந்துள்ளார்.

    அப்போது திடீரென்று மாடு கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கிப் பாய்ந்து பாலமுருகனின் நெஞ்சுப் பகுதியில் முட்டியதாக தெரிகிறது.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு கடுமையான ரத்த இழப்பு ஏற்பட்டது.‌

    உடனடியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரச சிகிச்சை மையத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலமுருகனின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வாடிவாசலில் இருந்து வரும் காளைகளை உரிமையாளர்கள் பிடிக்கும் கடைசி இடத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அவனியாபுரத்தில் நடைபெற்ற வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 60‌க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

  14. தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்க அதிமுக ஆட்சியிலேயே நடவடிக்கை - உரிமை கோரும் ஓபிஎஸ்

    புதிய மருத்துவ கல்லூரிகள்

    பட மூலாதாரம், PIB

    படக்குறிப்பு, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி திறந்து வைத்தார்

    தமிழ்நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கு நடவடிக்கை எடுத்தது அதிமுக என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான, இணக்கமான நடவடிக்கையால் மத்திய அரசின் நிதியுதவியுடன் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவைதான் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கிய அதிமுகவின் சாதனையை தனது சாதனையாக திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்து. மருத்துவதுறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்க அதிமுகதான் காரணம்.

    கிட்டதட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது, பொது நல கோரிக்கைகளான மாநில சுயாட்சி, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவது, மத்திய அரசின் வரி பகிர்வு குறைவு உள்ளிட்டவை குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்து விட்டு, சாதனை படைத்த அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது. மருத்துவதுறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ அதிமுகதான் காரணம்.என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    கடந்த 12ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, ''ஒரேநேரத்தில் 11 மருத்துவகல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன் உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவகல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆகையால், எனது சாதனைகளை நானே முறியடிக்கிறேன்'' என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. டெல்லி காஜிபூர் மலர் சந்தையில் கண்டெக்கப்பட்ட ஐஇடி வெடிகுண்டு: காவல்துறை, என்எஸ்ஜி நேரில் விசாரணை

    வெடிகுண்டு

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, தேசிய பாதுகாப்பு படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்ட ஐஇடி ரக வெடிகுண்டு

    டெல்லி காஜிபூரின் மலர் சந்தையில் கேட்பாரற்று கிடந்த சக்திவாய்ந்த ஐஇடி ரக வெடிகுண்டை தேசிய பாதுகாப்பு படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

    "இந்த வெடிகுண்டு தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது ஐஇடி ரக குண்டு கண்டுபிடிக்கப்பட்டது," என்று காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறினார்.

    நெரிசல் மிகுந்த சந்தையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையில் இந்த ஐஇடி வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட கிழக்கு டெல்லி சந்தைக்கு வந்த தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் அதை செயலிக்கச் செய்தனர். அந்த வெடிகுண்டு கிடந்த பையின் படங்கள் செய்தி நிறுவனங்களிடம் பகிரப்பட்டன.

    இந்த சம்பவம் தொடர்பாக வெடிபொருள் சட்டத்தின் விதிகளின் கீழ் டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

    முன்னதாக, கேட்பாரற்று கிடந்த பை தொடர்பாக முதலில் டெல்லி தீயணைப்புத் துறைக்கு தொலைபேசி வாயிலாக காலை 10.20 மணியளவில் அழைப்பு வந்தது.

    அதன்பேரில் உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31ல் தொடங்க பரிந்துரை

    பட்ஜெட் கூட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

    இந்த பரிந்துரை குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டால், இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடத்தப்படும்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தலாம் என்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து – ஆஸ்திரேலியாவில்

    ஜோகோவிச்

    பட மூலாதாரம், Novak Djokovic

    படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் விசா ரத்து - ஆஸ்திரேலியா

    செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் உலகளவில் முன்னணி டென்னிஸ் வீரராக உள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவரின் விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

    ஆனாலும் ஜோகோவிச் அங்கேயே தங்கி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் விசா ரத்தை நிறுத்தி வைத்தது. இதையடுத்து தொடர் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், 2வது முறையாக அவருக்கான விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஆகையால் மக்கள் நலன் கருதி விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிராங்கோ முலக்கல்: கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவு வழக்கில் பிஷப்பை கேரள நீதிமன்றம் விடுவித்தது

    பாதிரியார்

    பட மூலாதாரம்,

    2014 மற்றும் 2016 க்கு இடையில் கன்னியாஸ்திரியை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிஷப்பை இந்திய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

    54 வயதான பிராங்கோ முலக்கல், 2018ஆம் ஆண்டு இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கைது செய்யப்பட்டார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்தார்.

    அவர் மீதான தனது புகார்களை கத்தோலிக்க திருச்சபை புறக்கணித்ததாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியதை அடுத்து இந்த வழக்கு பரவலான கவனத்தை ஈர்த்தது. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    இந்த நிலையில், பிஷப் பிராங்கோ முலக்கலை அவரது பணிகளில் வத்திக்கான் தற்காலிகமாக விடுவித்தது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கேரளாவில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் பிராங்கோ முலக்கல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்தது.

    "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது" என்று கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிபதி (ஏஎஸ்ஜே) ஜி கோபகுமார் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கன்னியாஸ்திரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  19. இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று 2.64 லட்சம்

    இந்திய அளவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 2, 64, 202 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 2.47 லட்சமாக இருந்தது. இதை விட 6.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 1, 09, 345 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது வரை மொத்தம் 12, 72, 073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 14.78 விழுக்காடாக உள்ளது. மொத்த ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5, 753 ஆக உள்ளது.

    தமிழ்நாடு விபரம்

    தமிழ்நாடு மருத்துவத்துறை அறிக்கையின்படி, நேற்று ஒரு நாள் கொரோனா தொற்று 20, 911 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 8, 218 ஆக பதிவாகியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2, 030,கோயம்புத்தூரில் 1, 162 பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 6, 235 பேர் குணமாகியுள்ளனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது வரை மொத்தம் 1, 03, 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம்₹ 200லிருந்து ₹ 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து - கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுகோள்

    ரஜினி வாழ்த்து

    பட மூலாதாரம், Rajinikanth

    படக்குறிப்பு, ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவும் கிடையாது - ரஜினிகாந்த்

    தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரசிகர்களைப் பார்த்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு கஷ்டமான ஆபத்தான சூழலில் வாழ்ந்திட்டிருக்கோம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்,'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு