பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறை - விசாரணை குழு அமைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் சென்ற போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மல்ஹோத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் மாநில டி.ஜி.பி., தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 5ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோதி சென்ற போது, அவரது வாகன தொடரணிக்கு முன்பாக சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு



