இன்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை போடப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோர் இதனைப் போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
இணை நோய்கள் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் அதற்கான மருத்துவச் சான்று எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமையே தொடங்கிவிட்டது.

