ஒமிக்ரான் தொற்று: இந்தியாவில் முதல் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தானில் 74 வயதானவர் ஓமிக்ரான் திரிபு தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில் இறந்துள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பால் ஏற்பட்ட முதல் இறப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,630 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், சுமார் 6 மடங்கு ஓமிக்ரான் திரிபு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
24 மணிநேரத்தில் 325 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், அதில் ஒருவர் மட்டுமே ஓமிக்ரான் திரிபோடு தொடர்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நபர் "நீரிழிவு மற்றும் மற்ற துணைக் கோளாறுகள் உடைய உடல் நிலையைக் கொண்டிருந்த முதியவர். அடிப்படையில் இது ஓமிக்ரான் தொடர்பான இறப்பு" என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


