ராணி வேலு நாச்சியாரை வணங்குகிறேன்- பிரதமர் மோதி ட்வீட்
சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய பிரதமர் மோதி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த பதிவை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு


