ஒமிக்ரான் பரவல் அதிகமானால் ஜல்லிக்கட்டு நடக்காது என்று சட்டதுறை அமைச்சர் ரகுபதி காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, "ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, அரசு தடை விதிக்காமல் இருந்தால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். மாறாக தொற்று பரவுவது அதிகமாகி, கட்டுபாடுகள் விதிக்கப்பட்டால், ஜல்லிக்கட்டு நடக்காது" என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள நளினி வழக்கில், ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது . ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம். வரும் 2022 ல் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் உரிமைக்காக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார் . தேடுதல் வேட்டை நிறுத்தப்படவில்லை தலைமறைவாக இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம். விரைவில் கைது செய்யப்படுவார்" என்றார்.