விருதுநகரில் சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. தற்கொலை, பிரபுராவ் ஆனந்தன்

பட மூலாதாரம், Railway Police
விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளராக இருந்தவர், ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி பானுமதி சிவகாசியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற ராதாகிருஷ்ணன் இரவு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் டிரைவர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடம் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி. அதனால், இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குத் தற்கொலை செய்து கொண்டது விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.





