பேஸ்புக்கில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பழகியவர் ஆண் என்று தெரிந்ததால் அவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து. மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்ணாணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவரை கொலை செய்தது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த் முருகன் (24) என்பதும் தெரியவந்தது.
முருகன் கொலை குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் நடத்திய விசரணையில், இறந்து போன முருகன் அமுதா என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கி வைத்துள்ளார்.
அந்த முகநூல் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனிடம் பெண் என்று நினைத்து பேஸ்புக் வழியாக பழகி வந்துள்ளார்.
பின்னர் இருவரும் செல்போன் நம்பர் பரிமாறிக் கொண்டுள்ளார்.; காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகனிடம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் செல்போனில் பெண் குரலில் பேசி வந்துள்ளார்.
இருவரும் காதலர் தினத்தன்று சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எட்டையாபுரம் வந்துள்ளார்.
எட்டயபுரத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தான் பேசிய பழகி வந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரிய வந்தது.
உடனே முருகன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதாக கூறி கிளம்பியபோது, அவருடன் சமரசம் பேசி தன்னுடன் அழைத்துச் சென்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகனை மிரட்டி மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி அழைத்துள்ளார்.
ஆனால் முருகன் மறுத்துவிடவே இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எப்படியாவது விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனை கொலை செய்துவிட்டு அவனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை அழித்து விட வேண்டும் என திட்டமிட்டு குளிர் பானத்தில் விஷத்தை ஊற்றி வைத்துள்ளார்.
இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை காஞ்சிபுரம் முருகன் விளாத்திகுளம் முருகனுக்கு கொடுத்துள்ளார்.அதை குடித்த முருகன் மயக்கத்தில் இருந்துள்ளார்.
அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் அருகில் இருந்த கல்லை முருகனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கொலை செய்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் தனது மணி பர்ஸ்சை தவற விட்டு சென்றுள்ளார்.
முருகன் தனது வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மணி பர்ஸ்சை தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மீண்டும் மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.