ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயது வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி, ஸ்வீடன் வீராங்கனை லிண்டா பெர்க்ஸ்ட்ரோமுடன் விளையாடினார். முதல் ரவுண்டில் 11க்கு 5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தபோதும் அடுத்து நடந்த ஆட்டத்தில் இழந்த இடத்தை பிடிக்க கடுமையாக முயன்றார்.
இதைத்தொடர்ந்து, 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் சுதிர்தா. இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி
இதற்கிடையே, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிகா பாத்ரா, ஷரத் கமல் இணை தோல்வி அடைந்தது.
இந்த இணை சீன தைபே கலப்பு இரட்டையர் ஜோடி லின் யுன் ஜு செங் சிங் கோடியிடம் தோல்வி அடைந்தது.
இந்திய ஜோடி 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் 27 நிமிடங்கள் விளையாடி தோல்வியைத் தழுவியது. ஆடிய நான்கு செட்களிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.