சரத் பவார் - நரேந்திர மோதி சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம், வேளாண் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.