தகவல் தொழில்நுட்ப
விதிகள் 2021 அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி இந்தியாவின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில்
தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஓடிடி தளத்தில்
வெளியாகும் படங்ளை ஒழுங்குமுறை படுத்தவேண்டும் என்ற விதிக்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில்
நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிய
மத்திய அரசின் வழக்கு நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர் மற்றும் சஞ்சய் கண்ணா ஆகியோர் முன்பு
விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றங்களில்
இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொலிசிட்டர்
ஜெனரல் துஷர் மேத்தா கோரிக்கை விடுக்க, அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
மத்திள அரசு இதுதொடர்பாக
தொடர்ந்திருக்கும் வழக்கில், டெல்லி, மும்பை, மெட்ராஸ் மற்றும் கேரளா உயர்நீதிமன்றங்கள்
இந்த வழக்கை கையில் எடுத்திருப்பதாகவும், இது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்
என்றும் கூறியிருந்தது.
சமீபத்தில் திருத்தம்
செய்யப்பட்ட ஐ.டி விதிகளில், ஆன்லைன் ஊடக தளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக
ஊடக தளங்கள் மற்றும் ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பல்வேறு
தரப்பினரும், இந்த புதிய ஐடி விதிகளுக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.