தென் கொரியாவில் திடீரென ஒரே நாளில் அதிக தொற்றுகள், எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய வெகு சில உலக நாடுகளில் ஒன்று தென் கொரியா.
அங்கு கடந்த 49 நாள்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் தொற்று பரவியுள்ளது. அதிகம் என்பதெல்லாம் சரி. எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்கிறீர்களா?
அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஒரு சின்ன முன் கதை சுருக்கம்:சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாடுகளில் தென் கொரியா முக்கியமானது. ஆனால், விரிவான பரிசோதனைகள் செய்து, உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கொரோனா தொற்று எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்திவிட்டது. இதுவரை வெறும் 11,265 பேருக்கு மட்டுமே அந்நாட்டில் தொற்று பரவியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 269. இந்தியாவில் கொரோனா தொற்றுவதற்கு பல வாரங்கள் முன்பே கொரியாவில் தொற்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்தி முடித்த ஒரே உலக நாடும் தென் கொரியாதான். அரசாங்கம் செய்த அட்டகாசமான நடவடிக்கையை அங்கீகரிக்கும் விதமாக ஆளுங்கட்சி அபார வெற்றி பெற்றது.
சரி மீண்டும் இப்போதைய கதைக்கு வருவோம்.
வெற்றிகரமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திவிட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 20 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், கடந்த 49 நாள்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில்.... 40 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்கிறார் தென் கொரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர்.
இதில் பெரும்பாலான தொற்றுகள் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மூலம் வந்துள்ளதாம்.
வெறும் 40 பேர்தானே என்று அந்நாட்டு அரசு சும்மா இருக்கவில்லை. இன்று 447 பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். இப்படி திறப்பது ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகளில் 111 பள்ளிகள் தலைநகர் சோலில் உள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு




