எனக்கு லிட்டர் கணக்கில் ஆக்சிஜன் தேவைப்பட்டது - பிரிட்டன் பிரதமர்

பட மூலாதாரம், AFP
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திட்டம் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், தன்னை உயிரோடு வைத்திருக்க, லிட்டர் கணக்கில் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதில் இருந்து எப்படி மீண்டு வரப் போகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன் என்று அவர் தெரிவித்தார்.
இருதினங்களுக்கு முன்பு பிரட்டன் பிரதமர் ஜான்சனுக்கும், அவரது வருங்கால மனைவியான கேரி சிமண்டசுக்கும் ஆண் குழந்தை பிறந்தது.தங்களது தாத்தாக்கள மற்றும் தனக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குழந்தைக்கு வில்ஃப்ரெட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமண்டஸ் இன்ஸடாகிராமில் பதிவிட்டுள்ளார்.


