நாளை, சனிக்கிழமை முதல் பாகிஸ்தானில் ரமலான் மாதம் தொடங்கவுள்ளதையொட்டி, ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த மசூதிகளை தொழுகைக்காகத் திறக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக கிருமிநாசினியைப் பயன்படுத்துவது, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டுத் தொழுவது உள்ளிட்டவற்றுக்கு இஸ்லாமிய மதகுருக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.
இஸ்லாம் மதம் தோன்றிய, இன்றைய சௌதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பொது தொழுகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில் பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சௌதி அரசு கூறியுள்ளது.
அவர்கள் வீட்டிலேயே தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மசூதிகளை மூடுவது மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியன மக்கள் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என் எகிப்து அதிபர் ஃபடா அல்-சிசி கூறியுள்ளார்.
ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஐக்கிய அரபு அமீரகம் ஊரடங்கைத் தளர்த்துகிறது.