இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது - சோனியா காந்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின் முதன்முதலாக அது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்து இந்திய அரசாங்கம், போதிய நடவடிக்கை எடுக்காமல் , பகுதி அளவே கேட்டு நடந்துகொள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தான் பலமுறை எழுதிய கடிதங்களை குறிப்பிட்டு சோனியாகாந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய அரசு அமலாக்கியுள்ள முடக்க நிலையால் உண்டாகும் பாதிப்புகளை குறைப்பதில் கனிவு மற்றும் முன்னெச்சரிக்கை ஆகியவற்றை காட்டுவதில் இந்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
தற்போதைய முடக்க நிலை முடிவுக்கு வர உள்ள மே மூன்றாம் தேதிக்கு பிறகு நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பது போல தெரியவில்லை என்றும் மே மூன்றாம் தேதிக்கு பிறகும் தற்போது உள்ளது போலவே முடக்க நிலை நீடித்தால் அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்றும் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு







