கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினை விட, நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
நியூயார்க்கில் மட்டும் சுமார் 1,60,000 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனாவால் ஸ்பெயினில் 1,53,000 பேரும், இத்தாலியில் 1,43,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நியூயார்க்கில் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.
அங்கு புதன்கிழமை மட்டும் 799 பேர் உயிரிழந்தனர். மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000த்தை கடந்துள்ளது.