ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல் மாநிலம் ஒடிஷா.
ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
ஒடிஷாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு








