கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமைச் செயலகம் வந்து அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். இதுகுறித்த சமீபத்திய தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள், செய்தியாளர்களின் பகுப்பாய்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமைச் செயலகம் வந்து அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பட மூலாதாரம், @mkstalin/X
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்” என, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.” என்றார்.
மேலும், ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும் “ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும்” சமாளித்துதான் தங்கள் அரசு எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்றும், கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் தங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என தான் நம்புவதாகவும் “வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்." என தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். பின்னர், உயரதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR

பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் செல்கிறார்.

மக்கள் மாற்றத்தை விரும்பி விஜயைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இரு குழந்தைகளை இழந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்தாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதில்,14 வயது மகள் கோகிலா, 11 வயது மகள் பழனியம்மாள் ஆகியோரை இழந்த பெருமாள்–செல்வராணி தம்பதி, விஜய் பதவியேற்பு விழாவை தங்களின் இல்லத்தில் குடும்பத்தினருடன் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பெருமாள், “‘நாங்கள் எங்களின் 2 குழந்தைகளை இழந்த வேதனையில் இருந்தாலும் தற்போது விஜய் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நிச்சயமாக அவர் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.’’ என்றார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய செல்வராணி, "விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டுக்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள்.
எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில் கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், TN DIPR
தொடர்ந்து பேசிய விஜய், “மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நம் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி” என்றார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தவெக அரசுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பேசிவருகிறார்.
"மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்." என்றார்.
"என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே.
கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும்.
மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், என் அரசில் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன்.
‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து எடுத்துவிடுங்கள்." என விஜய் பேசினார்.
"பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள் என எல்லோரும் இந்த அரசின் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுடன் இந்த அரசு எப்போதும் உடன் இருக்கும். இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய முகம்தான் விஜய்.
எங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி
விஜய் (மாமாவின்) குட்டி நண்பர்களுக்கும் நன்றி. உங்களுக்காக எல்லா நல்ல விஷயங்களையும் நான் செய்வேன்.
தவெக தோழர்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. நிர்வாகிகள், தோழர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், விர்ச்சுவல் வாரியர்ஸ் அனைவருக்கும் நன்றிகள். எல்லோரும் சேர்ந்து புதிய அரசை கொடுப்போம். இதுவொரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மையின் புதிய காலம் தற்போது தொடங்குகிறது." என்றார்.

பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சர் விஜய் தற்போது விழா மேடையில் உரையாற்றிவருகிறார்.
"வறுமை, பசி என்றால் என்னவென எனக்கு நன்றாக தெரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களின் மகன், சகோதரனாகவே நான் என்னை உணர்கிறேன்." என விஜய் தெரிவித்தார்.
"இந்த பயணத்தில் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்கள் வந்ததோ அதேபோன்று என்னுடன் நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தாமல் என்னுடன் நின்றீர்கள். இப்போது ‘சி ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கியுள்ளீர்கள்."
“நான் தேவதூதன் அல்ல, நானு சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
“முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏற்றிவைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும். என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடனும் என்று நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.” என விஜய் தெரிவித்தார்.
விழா மேடையிலேயே முக்கியமான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
அத்திட்டங்களின் விவரம்:
500 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்
'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' அமைக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா 1 வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும்.
ஆகிய முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

பட மூலாதாரம், TN DIPR
29 வயதான கீர்த்தனா எம்.எஸ்சி பட்டதாரி ஆவார். தனிநபர் ஆலோசகராக பணியாற்றிவருவதாக அவர் தன் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரமாண பத்திரப்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.22 லட்சத்து 57,710 ஆகும்.
சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்தலில் வென்றதும் தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தனா இந்தியில் பேசியது சமூக ஊடகங்களில் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளானது.

பட மூலாதாரம், TN DIPR
விஜய் பதவியேற்ற நிலையில், அடுத்ததாக 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். அதன்படி, என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். 'சி ஜோசப் விஜய் எனும் நான்' எனக்கூறி விஜய் பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.
'ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்" எனக்கூறி விஜய் பதவியேற்றார்.

பட மூலாதாரம், TN DIPR
விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், தொடக்க நிகழ்வாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது. அடுத்ததாக தேசிய கீதமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.



பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சராக விஜய் பதவியேற்பதை நேரலையில் காண...

பட மூலாதாரம், DIPR
பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு விஜய் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.