You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் சூரியகாந்திக்கு கைமுறை மகரந்த சேர்க்கை
வேளாண் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி சூரியகாந்தி விவசாயிகள் பயிர்களில் கைமுறை மகரந்த சேர்க்கை செய்து நல்ல விளைச்சல் பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. சூரியகாந்தி மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது.
சூரியகாந்தி செடியில் மகரந்த சேர்க்கையில் பெரியளவு பணியைச் செய்தது தேனீக்கள், குளவிகள், ஈக்கள், வண்டுகள். சூரியகாந்தி பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை தீவிரமாக நடைபெறுவதால் அதிக மகசூல் கிடைக்கும். இப்போது தேனீக்கள் மிகவும் குறைந்துவிட்டதால், சூரியகாந்தி செடிகளுக்கு செயற்கை முறை மகரந்த சேர்க்கையின் இரண்டு முறைகளை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.
தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: வில்ஃபிரெட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்