திரெளபதி முர்மூ: 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக இன்று (ஜூலை 25) பொறுப்பேற்றுக்கொண்டார் திரௌபதி முர்மூ.

இவர், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் மட்டுமல்ல. சுதந்திர இந்தியாவில் (1947க்குப் பின்) பிறந்த முதல் குடியரசு தலைவரும் இவர்தான். இவருக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி. ரமணா குடியரசுத் தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :