You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதய்பூர் படுகொலை நடந்த பகுதியில் இப்போதைய கள நிலவரம் என்ன?
இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறார்கள். குறுகலான ஒரு சாலை. கடந்த மூன்று நாட்களாக அங்கு ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு காவல்துறை கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் பலமாக உள்ளன.
ராஜஸ்தானின் உதய்பூரின் இந்தப் பகுதி 'ஹாதிபோல்' என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்குள்ள ஒரு தெருவில், தையல்காரரான கன்ஹையாலால், இரண்டு முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டார்.
அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. கன்ஹையா லாலை கொலை செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்