திருவொற்றியூர் கட்டடம்: "வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது!"

பிரசுரிக்கப்பட்டது

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. அங்குள்ள நான்கு பிளாக்குகளில் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை டி பிளாக் அதிகாலை 5 மணியளவில் கட்டடத்தில் விரிசல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் உணர்ந்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஒருவர் பின் ஒருவராக அச்சம் காரணமாக கட்டடத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அனைவரும் முழுமையாக வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. சம்பவம் நடந்த பகுதியை பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டு செய்தியாளர் விஜயானந்த் வழங்கும் கள நிலவரம்.

காணொளி, படங்கள்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: