குமரியில் தரைப்பாலம் வலுவில்லாததால் காடுகளிலேயே முடங்கிய மோதிரமலை மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மோதிரமலை கிராமம். இந்த கிராமத்தை சுற்றி சுமார் 12க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மலைவாழ் பழங்குடி காணி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் வாழை, கிராம்பு, கிழங்கு, மிளகு, பாக்கு உள்ளிட்ட விளை பொருட்களை விளைவிக்கின்றனர். இன்னும் சிலர் தமிழ்நாடு அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் விவசாய கூலிகளாக இருந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மலைவாழ் பழங்குடியின மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி, காட்டு யானை, காட்டு எருமைகளால் விளை நிலங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களின் அனுபவத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :