You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா: அரிய வகை நோயை கலையால் வெல்லும் கடலூர் பெண்
கடலூர் மாவட்டம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் ஷெரில் (21), பிறப்பிலேயே அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தினமும் மாத்திரைகள் உட்கொண்டால் தான் உயிர் வாழ முடியும், இப்படிப்பட்ட அரிய வகை நோயுடன் பிறந்த ஏஞ்சலின் இந்த நோயால் முடங்கிவிடாமல் பரதம், சிலம்பம், கரகம், கட்டைக்கால் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தமிழர் கலைகளைக் கற்று 16 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் பள்ளி பருவத்திலேயே இவருடைய சாதனைகளை பாராட்டி தமிழக அரசின் உயரிய விருதான கலை இளமணி விருதை தனது 16 வயதில் பெற்றுள்ளார்.
காணொளித் தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
குறிப்பு: இந்த காணொளியில் பிளேடை கண் இமையில் பிடிக்கும் காட்சியை தொழில்முறை பயிற்சிக்கு பிறகு ஏஞ்சலின் மேற்கொண்டுள்ளார். மற்றவர்கள் முறையான பயிற்சியின்றி இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி அறிமுகப்படுத்தவுள்ள செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என்றால் என்ன?
- உத்தர பிரதேசத்தில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பின்போது பலி
- டைனோசர்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தரும் எச்சங்கள்
- 'சிவகுமாரின் சபதம்': விமர்சனம்
- பெண் அதிகாரிக்கு 'இரு விரல்' பரிசோதனை நடத்தியதா இந்திய விமானப்படை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்