கொரோனா: 13 மாதங்களில் 3 முறை பாதிப்புக்கு உள்ளான பெண் மருத்துவர்

பிரசுரிக்கப்பட்டது

"எனக்கு மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்?"

26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரிக்கு கடந்த 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

அதில் குறிப்பாக கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு-இன் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்ட பிறகு இரு முறை தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் கொரோனா வராமல் இருக்கும் என்று கூற முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால்,தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை தடுப்பூசி குறைக்க உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :