கழுதை கறி சாப்பிட்டால் பாலியல் ஆற்றல் அதிகரிக்குமா? - ஆந்திராவில் அமோக விற்பனை

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவில், அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் இப்போது கழுதையும் சேர்ந்துள்ளது. பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கோழி, ஆட்டிறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் இப்போது அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.

ஆந்திராவில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக கழுதைப் பால் குடித்து வருவதாகவும், அதன் இறைச்சியை உண்பதால், பாலியல் ஆற்றல் பெருகுவதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், கழுதைப் பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதன் இறைச்சி, பாலியல் திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :