ஆற்காடு நவாப் வாழ்ந்த ஹுமாயூன் மஹால்: பழைய தொழில் நுட்பத்தில் புதுப் பொலிவு பெறுகிறது

பிரசுரிக்கப்பட்டது

சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஹுமாயூன் மஹால் 250 ஆண்டுகள் பழமையானது. இதனை புதுப்பிக்க மாநிலப் பொதுப் பணித் துறை முடிவு செய்தது.

இதற்காக பழங்கால முறையில் சுண்ணாம்புக் கலவை உருவாக்கி, பழைய தொழில் நுட்பத்தில் இந்த மஹால் புதுப் பொலிவு பெறுகிறது.

மாடு கொண்டு செக்கில் கலவையை அரைத்து பக்குவப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப் இங்குதான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: