உதகையில் கண்கவரும் மலர் கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)

பிரசுரிக்கப்பட்டது
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி துவங்கியுள்ளது. தொடர்ந்து 5 தினங்களுக்கு நடைபெறும் 122வது கண்காட்சியில் பிளாக்ஸி,டேலியம், பால்சம் ,டியூலிப், ஜின்சர் லில்லி, அந்தோரியம் போன்ற 185 வகையான பூக்கள் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மலர்கள் கொண்டு, 60 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட மேட்டூர் நீர் அணை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
பலவிதமான காய்கள், பழங்கள் கொண்டு அமைக்கப்பட்ட விதவிதமான உருவங்கள், கண்ணைகவரும் மலர் தோட்டங்கள், மேட்டூர் அணை அமைப்பு ,பார்பி பொம்மை , பறவைகள், விலங்குகள், படகு போன்றவை பார்வையளர்களை மிகுதியாய் கவர்ந்தது.








பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























