கைதி பட சர்ச்சை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருந்தவர். 2007ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன பின்பு தனது நண்பர் ஒருவர் மூலமாக எஸ்.ஆர். பிரவை சந்தித்து சிறையில் இருந்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு உருவாக்கிய கதையை சொல்லியதாக கூறுகிறார்.

தனது கதையை படமாக்கலாம் என முடிவெடுத்து தனக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் முன்பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கு பின்பு இந்த படத்தின் நிலை குறித்து தம்மிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ராஜீவ் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் இந்த படத்தை பார்த்தபோது கதை திருடப்பட்டது தெரியவந்தது எனக் கூறி கேரள நீதிமன்றத்தில் ராஜீவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :